- Sunday
- June 22nd, 2025

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. (more…)

இடது காலிலுள்ள கட்டியென்றை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளச் சென்ற 9 வயது பாடசாலை மாணவன் ஒருவருக்கு வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியரொருவர். இச்சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இவ்வனர்த்தம் கோப்பாய் வடக்கு இலகடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான இராசதுரை திருவானந்தத்தின் மூன்றாவது மகனான கயலக்ஷன் என்ற பாடசாலைசாலை சிறுவனுக்கே...

உள்நாட்டு போரின் போது இலங்கை தமது சொந்த ஒழுங்கு நடைமுறை ஒன்றை கைக்கொள்ள வேண்டும் என்று இலங்கை இராணுவம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. (more…)

இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக செல்வோருக்கான வயது எல்லை குறைந்தது 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (more…)

கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த கல்லூரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (more…)

தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கிய கிராமங்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் பொருட்டு, யாழ்ப்பாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்களை நிறுவுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் சிவில் நிர்வாகமே இடம்பெற்று வருகின்றது. தெற்கில் இராணுவ முகாம்கள் இருப்பதைப் போன்றே வடக்கிலும் அவசர தேவைகளுக்காக இராணுவ முகாம்களை அமைத்து இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

கனகரத்தினம் மகாவித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக சென்.ஜேம்ஸ் மகளிர் கல்லூரி அதிபரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தரவுகளில் மாற்றம் ஏற்படுத்தியமை தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி பாதுகாப்பு அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

யாழ். பண்ணையில் அமைந்துள்ள முத்தமிழ் அரங்கம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

கடந்த ஆண்டில் புதிதாக 2411 புதிய சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு 15 படகுகளும் 15 இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. (more…)

பாடசாலைமட்ட, கோட்ட மட்ட, வலய மட்ட, மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது பிரதம விருந்தினர்களாக அழைக்கப்படுவோர் குறித்துத் தீர்மானித்த பின்னர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் அதற்குரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் யாழில் 9 1/2 மணித்தியால மின்தடை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. (more…)

இந்திய சிற்பக் கலைஞர் புருஷேத்மன் தலைமையிலான குழுவினரால் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அமைக்கப்ப்பட்ட சிலை நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 72 அடி உயரமான இந்த ஆஞ்சநேயர் சிலை, ஆலயக் குருக்கள் சுந்தரேஸ்வரக் குருக்களினால் திறந்துவைக்கப்பட்டது.

இராணுவத்தில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு தடை இல்லை. அதற்கு தகுதியுள்ளவர்களுக்கு எப்பொழுதும் வாசற்கதவு திறந்தே உள்ளது' என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். (more…)

திருமண வைபவத்திற்கு சென்று கொண்டிருந்த மூச்சக்கர வண்டியை பட்டாரக வாகனம் ஒன்று இடித்து தள்ளியதில் மிகவும் மோசமான நிலையில் மூச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

இந்திய மீனவரின் அத்துமீறலானது எமது வாழ்வாதாரம் மீது பேரிடியாக வீழ்ந்துள்ளது. இந்த அத்துமீறலானது எமது கடல் வளங்களை தினமும் சுரண்டுவது மட்டுமல்லாமல் எமது கடற்றொழிலாளரின் ஜீவனோபாயத்தையே சீரழித்துள்ளது. இந்திய ரோலர்களின் அத்துமீறல் தடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts