- Monday
- June 23rd, 2025

இலங்கையில் குறிப்பாக வடக்கில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ நெருக்குவாரங்கள், மற்றும் சட்டவிரோதமான குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன. இவைகளை தடுத்துநிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் (ஈ.பி.டி.பி) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. (more…)

கைக்குழந்தைகளை, சிறுவர், சிறுமியரை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்போரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறுவர், பெண்கள் பாதுகாப்பு அதிகாரசபை அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாவட்ட ஹொக்கிச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் மேற்கொள்ளப்பட்டன. பின்வருபவர்கள் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களாவன, தலைவர் - எம்.இளம்பிறையன் செயலாளர் - பி.நேசரூபன் உபதலைவர்கள் - என்.துஸ்யந்தன், சி.எ.அரவிந்தன், ரி.பி.கணேசன், பொருளாளர் -...

இலங்கையின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. (more…)

துவிச்சக்கர வண்டிக்கு “லைட்” போடாத காரணத்தால் நான்கு பேரின் துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் நேற்று இரவு 7.30 மணிக்கு இருபாலையில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (more…)

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். (more…)

பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது வெலிகந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் எஞ்சிய இரண்டு மாணவர்களும் அடுத்த மாதமளவில் விடுதலை செய்யப்படுவர்கள் என இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

கைகொடுக்கும் நண்பர்கள் என்ற தொனிப்பொருளிலான சுமித்திராயோ தொண்டர் நிறுவனத்தின் யாழ்ப்பாணக்கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வும் அலுவலக திறப்பு நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. (more…)

இலங்கை சாரதிகள் பயிற்சிப் பாடசாலைகள் சங்கங்கத்தினால் வீதிச் சட்டங்களுக்கு அமைவாக சாரதிப்பயிற்சிப் பாடசாலைகளில் எவ்வாறு சாரதிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்பது தொடர்பில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளின் பயிற்றிவிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. (more…)

அமெரிக்கத் துணைத்தூதரகமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்குமாறு அமெரிக்க இராஜதந்திரிகளிடம், யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். (more…)

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது என பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. (more…)

வடக்கு மாகாண சபையினால் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து நிர்மானிக்கப்பட்ட சுன்னாகம் மற்றும் அச்சுவேலி ஆகிய பேரூந்து நிலையங்கள் நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

வேறுபாடுகள் இல்லாமல் எங்கள் பிரதேசத்தின் அபிவிருத்தியில் ஒன்றிணைந்து செயற்படத்தயாராக இருக்கின்றோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். (more…)

தாக்குதல் சூத்திரதாரிகளின் புகைப்படங்களை அடையாளம் காட்ட வைத்தியர் மறுப்பு: காது, மூக்கு, தொண்டை வைத்திய வைத்திய நிபுணரின் தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிலரின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்ட நிலையில் வைத்தியர் அடையாளம் காண்பிக்க தவறுகின்றதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்;ற நிலையில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணம் நாவந்துறைக் கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. (more…)

வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts