2ம் வகை நீரிழிவு நோய்க்கான மருந்து தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு!

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துன்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும்

2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்ள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும். பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேருகளை நாளை வியாழக்கிழமை...
Ad Widget

‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு மீண்டும் நீதிமன்றம் தடை

உலக நாயகன் கமல்ஹாஸன் தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தடை விதித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிடலாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நேற்று இரவு 10.20க்கு தீர்ப்பு வழங்கியிருந்தது. (more…)

அரசியல் விளையாட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கிவிட்டனர்: கமல்

'அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (more…)

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மல்லாகம் நலன்புரி நிலைய மக்கள்!

மல்லாகம் கோணப்புலம் பகுதியில் அமைந்துள்ள நலன்புரி நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். (more…)

கரவெட்டி செல்வபுரம் பகுதிக்கான குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதிக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இம்மாதம் 27ம் திகதி இடம்பெற்றது. (more…)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்க யாழ்.பல்கலை. கலைப்பீட மாணவர்கள் தீர்மானம்

கிழக்கில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு வெள்ள நிவாரணம் ஒன்றை மேற்கொள்ள யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. (more…)

விஸ்வரூபம் மீதான தடை நீக்கம் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தை திரையிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படம் தீர்ப்பு மீண்டும் நேற்றிரவு 10 மணிக்கு அறிவிக்கப்படுவதாக இருந்த போதிலும் 10.20 மணிக்கே தீர்ப்பளிக்கப்பட்டது. (more…)

புனர்வாழ்வு அமைச்சில் கடன் பெற 895 பேர் விண்ணப்பம்

புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்படுகின்ற கடன் திட்டத்திற்கு இதுவரை யாழ் மாவட்டத்தில் 895 பேர் விண்ணப்பித்துள்ளதாக புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான நிலையத்தின் இணைப்பு அதிகாரி மேஜர் ஜெகத்குமார தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் மின்தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் 30.01.2013 புதன்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)

புனர்வாழ்வு பெற்றோருக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு பெற்றவர்களிற்கான பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலயத்தின் இணைப்பாளர் மேஜர் ஜெகத் குமார தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கை இழிவானது: அமைச்சர் வாசுதேவ

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கை இழிவானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். (more…)

இலங்கையில் பள்ளிக்கூட, பல்கலைக்கழக வயது எல்லைகள் குறைப்பு

இலங்கையில் பள்ளிக்கூட மற்றும் பல்கலைக்கழக அனுமதி வயது எல்லைகள் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, பள்ளிக்கூடங்களுகான அனுமதி வயது 4 ஆகவும், பல்கலைக்கழக அனுமதி வயது 16 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டார்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

காணாமல் போன சிறுவன் யாழ். கந்தரோடை குளத்தில் சடலமாக மீட்பு

யாழ். கந்தரோரடை இக்கிராயன் குளத்தில் விளையாடச் சென்று காணாமல் போயிருந்த சிறுவன் குளத்திலிருந்து சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார். (more…)

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: கணவன் கைது

வீட்டுக்கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு 45 அடி உயர புதிய தேர்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமானது 1990 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால ஆலயமும், ஆலயத்தேரும் சேதமடைந்தது காணப்படுகின்றன. (more…)

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெறுவதற்கு முத்திரைக்கு பதில் பணம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெறுவதற்கு முத்திரைக்கு பதிலாக கட்டணமாக பணம் அறவிடப் படுவதால் புதிய நடை முறைகள் தெரியாத விண்ணப்பதாரிகள் பிரதேச செயலகங்களில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர். (more…)

உதயனுடன் சமரசத்திற்கு இடமில்லை – நீதிமன்றில் அமைச்சர் தேவானந்தா.

தனதும் தனது கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட அவதூறுச்செய்திக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடுத்த ஆயிரம் (1,000) கோடி ரூபா கோரும் மானநஷ்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. (more…)

யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தால் கறவைப் பசுக்கள் கையளிப்பு

யாழ்ப்பாணத்தல் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் கறவைப் பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 511ஆவது படைப்பிரிவினால் இந்த பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts