வரும் மாத இறுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க நடவடிக்கை

2011ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை 2013 மார்ச் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். (more…)

ஜனாதிபதியுடனான கூட்டத்திற்கு கூட்டமைப்புக்கு அழைப்பில்லை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளார். (more…)
Ad Widget

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் ?

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் மக்கள் நலன்புரி நிலையங்களில்!- படையினருக்கு ஹோட்டல் திறக்கிறார் ஜனாதிபதி

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் மயிலிட்டியில் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டலையும் ஜனாதிபதி எதிர்வரும் 12ம் திகதி திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்!- யாழ் கட்டளைத் தளபதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

மத சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசேட குழு

ஆன்மீக தலங்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. (more…)

வலி.வடக்கில் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியமர்வு?

வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள 6 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது. (more…)

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் இந்திய மீனவர்கள்

இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளினால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, எம்ஜ்டர்டேமை தளமாக கொண்ட கடல்வள ஆராய்ச்சி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

2011 உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன

2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபெறுகளின்படி வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வெட்டுப்புள்ளிகள் நேற்று இரவு வெளியிடப்பட்டதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

வடக்கு காணிகள் குறித்த கூட்டமைப்பின் பிரச்சாரம் பொய்யானது: இராணுவம்

வடக்கு காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வரும் பிரச்சாரம் பொய்யானது என இராணுவம் தெரிவித்துள்ளது. (more…)

வலி வடக்கு உண்ணவிரதப் போராட்டத்தில் ரணில் பங்கேற்பார்

தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியமர்த்துமாறு கோரி வலி வடக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

காணிகளை அபகரித்து வீடுகளை உடைத்தால் நல்லிணக்கம் ஏற்படுமா?: சரவணபவன் எம்.பி

தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தும், வீடுகளை இடித்தும் வெறியாட்டம்போடும் போது தேசிய நல்லிணக்கம் உருவாக முடியுமா?" என்று கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியின் சுதந்திர தின உரையானது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது. (more…)

இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபர் யாழ்.விஜயம்

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

யாழ்.நகரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஐவர் கைது

யாழ். நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இந்திய துணை தூதுவரின் செயலர் வீட்டில் திருட்டு

இந்திய துணை தூதுவரின் செயலாளர் வீட்டில் பெறுமதியான உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

90 கிலோ மட்டை சிங்கிறால் வைத்திருந்த 3 மீனவர்கள் கைது

அனுமதியின்றி மட்டை சிங்கிறால் பிடித்த மூன்று மீனவர்கள் கடற்றொழில் பரிசோதகரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)

யாழில் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக மகஜர் கையளிப்பு

மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூக புறக்கணிக்கப்பட்டு வருவதாக வலியுறுத்தும் மகஜர் ஒன்று யாழ். மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினால் யாழ். மாநகரசபை முஸ்லிம் உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது. (more…)

யாழ். மாநகர சபையை உடன் கூட்டவும்,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

யாழ். மாநகர சபையை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாழ்.மாநகர சபையின் மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

இலங்கையில் விஸ்வரூபத்திற்கான தற்காலிக தடை நீக்கப்பட்டது:

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.அந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னரே அதற்கான அனுமதியை தணிக்கை சபை இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம்

”கங்ணம் ஸ்ரைல்” நடனம் வெளிவந்து உலகெங்கும் பிரபல்யமாகியிருக்கும் இத்தருணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் உலகத்தலைவர்களை கிண்டல்செய்யும் வகையில் You tube இல் கணினி பல்லூடக வடிவமைப்பாளர்களால் காணொளிகள் வெளியிடப்பட்டு வருகின்றன . உங்களுக்காக சில வற்றினை இங்கே நகைச்சுவைக்காக தருகின்றோம் அமெரிக்க ஜனாதிபதியினை கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம் இலங்கை ஜனாதிபதியினை கிண்டல் செய்யும் ”கங்ணம்...
Loading posts...

All posts loaded

No more posts