Ad Widget

யாழ். மாவட்டத்தில் 72 கிராம உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்!

Suntharam arumai_CIயாழ். மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் 72 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

ஒரே பிரிவில் ஐந்தாண்டுகள் சேவையை நிறைவு செய்தவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டதன் பின்னர் கிராம உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

அத்துடன் இடமாற்றங்கள் பெற்றவர்கள் அது தொடர்பிலான மேன்முறையீடுகளை செயலகத்திற்கு சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts