Ad Widget

போதையில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே மோதல்

Fight Logoஇரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம் பெற்ற மோதலில் இரு குழுக்களும் ஒருவரையொருவர் கடித்து காயப்படுத்திய சம்பவம் அராலி வடக்கு செட்டியா மடத்தடியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நேற்று பிற்பகல் இரு இளைஞர் குழுக்களும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் பலம்மிக்கவர்கள் யார் என்பதை பார்க்க கையை மடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் ஏற்பட்ட குழப்பத்தினாலேயே இரு குழுக்களும் மோதிக் கொண்டன. இதன்போது ஒருவருக்கு தலை, நெஞ்சு மற்றும் கன்னத்திலும் கடித்து காயப்படுத்தியதுடன் இதற்கு பழி தீர்க்கும் வகையில் மற்றொருவரின் காதையும் கடித்து காயப்படுத்தியும் உள்ளார்கள்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts