- Saturday
- May 9th, 2026
வடக்கு மாகாண முதலமைச்சரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. முதலமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து யாழ்., முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. பயனாளி ஒருவருக்கு 25,000 ரூபா வீதம் 20 குடும்பங்களுக்கும் கோழி வளர்ப்பிற்கு தேவையான அனைத்துப் பொருள்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கப்பட்டன....
திஸ்ஸ அத்தநாயக்காவைப் போல, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆளும் அரசில் இணைந்து கொள்வர் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சாதகமானதும் நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான பயணம் முக்கியம். இந்த நாட்டின் அரசியலில் திறமை படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். இது மிக முக்கியமானதொன்று. வீழ்ச்சியுறும் கொள்கைகளுடன் தரிசனமில்லாத, எதிர்கால நோக்குகளற்ற திடமான...
இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தமிழர்களின் பிரச்சனை குறித்து சாதகமான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதனால் இருவேட்பாளர்களிலும் நாம் திருப்தியடைந்திருக்கவில்லை என தமிழ்தேசியக்கூட்டமைப்பு பேச்சாளர் நாடளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகம் ஒன்றுக்கு கருத்துகூறியுள்ளார். அரசுக்கட்சியோ சிறுபான்மையினரின் வாக்குகளில் தாம் தங்கியிருக்கவில்லை என கூறியுள்ளது. அதேவேளை மைத்திரி பால சிறிசேன அவர்களின் அண்மைக்கால கூற்றுக்கள் எமக்கு எதிரான...
தாவடி பகுதியில் மூவர் மீது சாரமாறியாக வாள்வெட்டு இடம்பெற்றதில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த வாள்வெட்டில் தாவடி பகுதியைச் சேர்ந்த ஞானகுமார் (வயது 38) பிரதீபன் (வயது 30) கஜாகரன் (வயது 21 ) ஆகியோரே காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தாவடி உப்புமடம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை...
ஆளும் கட்சியில் இணைந்துகொண்ட திஸ்ஸ அத்தநாயக்காவிற்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (more…)
முரண்பாடுகளை வளர்த்து கொண்டிருப்பதனால் மூன்று தசாப்த காலம் எமது இனம் அழிவுகளை சந்திக்க வேண்டி நேர்ந்ததாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் தெற்கு இளைஞர் அணியின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
2014 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமைகள் நிகழ்வு யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (16) காலை 9.45 மணிக்கு நடைபெறவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். கிளையின் இணைப்பாளர் த.கனகராஜ் திங்கட்கிழமை (08) தெரிவித்தார். சர்வதேச மனித உரிமைகள் தினமானது இவ்வருடம் 'மனித உரிமைகள்-365' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் இலங்கை...
வடமாகாணத்தில் கடந்த 30 வருடகாலமாக பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறவில்லை என்பதுடன், பெண்கள் இரவு வேளையிலும் தைரியமாக நடமாடித்திரிந்ததாகவும் யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் நாவலர் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (08) வெளியிடப்பட்டது. இதில்...
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களை மோசமாக பிரசுரிப்பதை தவிர்த்து வன்முறைக்கானதீர்வை ஊடகங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கிருத்திகா தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், பெண்கள் வன்முறைக்குள்ளாக்கப்படும் விடயத்தை தவிர்த்து வன்முறைக்குள்ளான...
சிவா மனசுல சக்தி’, ‘மாயக்கண்ணாடி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல படங்களில் நடிகர் ஆர்யா நட்புக்காக ஒரேயொரு காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார். அப்படத்தில் நடித்தவர்கள் நண்பர்கள் என்ற அடிப்படையிலும், மரியாதை நிமித்தமாகவும் இவ்வாறு ஒரேயொரு காட்சியில் நடித்துக் கொடுப்பதை ஆர்யா வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், ஜெயம்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து இன்று காலை யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியினால் மோட்டார் வாகன ஊர்வலம் நடாத்தப்பட்டது. இதன் போது யாழ் மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபை உறுப்பினருமான இராமநாதன் அங்கஜன் கலந்து கொண்டார். இந்நிகழ்வு அக்கட்சி காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக வைத்தியசாலை வீதி,வேம்படி...
ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ மக்கள் மத்தியில் உரை! நான் உங்கள் முன்னிலையில் வெற்றிலையுடன் வந்துள்ளேன். எமது தேர்தல் சின்னம் வெற்றிலை சின்னம்.. வெற்றிலை வெற்றியின் சின்னம். இந்த வெற்றியை அமோக வெற்றியாக்குவீர்கள் என்று வேட்பு மனு தாக்கலையடுத்து தேர்தல்கள் செயலகத்திலிருந்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வெளியேறிய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, ராஜகிரிய பகுதியில் கூடியிருந்த...
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் சமர்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும், 1981ஆம் ஆண்டு தேர்தல் சட்டதின் 15ஆம் இலக்க இலக்க தேர்தல் சட்டப்பிரமாணங்களின் படி தேர்தல் சட்டவிதிகளுக்கிணங்க கையளிக்கப்பட்டமையால், அனைத்து வேட்பு மனுக்களும் தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார். இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 17...
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க எம்முடன் இணைந்துகொண்டார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வேட்பு மனுவையை கையளித்ததன் பின்னர் ராஜகிரியவில் நடைபெற்று கொண்டிருக்கும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "செயலாளர் ஒருவர் போகும்போது, இன்னொரு செயலாளரை வரவழைப்பதென்பது மிகப்பெரிய வேலை இல்லை. எமது கதவு...
2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரது வேட்பு மனுக்களுக்கு எதிராக இரண்டு மறுப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த இரண்டு மறுப்புகளையும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்
அச்சுவேலி பகுதியிலிருந்து நேற்று பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.கிளைமோர் குண்டுகள், 325 வெடிபொருட்கள், 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 11, கைக்குண்டு ஒன்று ஆகியன நேற்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, புதிய ஹாரி பொட்டர் கதைகள் வெளியிடப்படும் என்று, எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் அறிவித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு ஹாரி பாட்டர் முதல் புத்தகம் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்தது. ஹாரி பாட்டரின் நாவலாசிரியர் ஜே.கே ரவுலிங்கும் உலகப் புகழடைந்தார். மேலும் 6 பாகங்கள் 2007 ஆம் ஆண்டு...
யாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரவீந்திர வைத்யலங்கார பதவியேற்றுள்ளார்.யாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த றொஹான் டயஸ் மாற்றலாகிச் சென்றுள்ளதையடுத்து புதிய டி.ஐ.ஜியாக ரவீந்திர வைத்யலங்கார நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு நிகழ்வுகள் காலை 9.45 மணிக்கு யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அத்துடன் மதத்தலைவர்களின் ஆசியியுடன் கையெழுத்திட்டு...
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று காலை அரசுடன் இணைந்துள்ளனர். பொதுச் செயலாளர் திஸ்ஸ் அத்தநாயக்க, சந்த்ராணி பண்டார மற்றும் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் அரசுடன் இணைந்துள்ளனர்.
Loading posts...
All posts loaded
No more posts
