காரைநகரில் புதிய பஸ்தரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்தார். காரைநகருக்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள் குறித்த பஸ்தரிப்பு நிலையங்களை நேற்று (08) திறந்து வைத்தார். முன்னதாக வலந்தலை சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் திறந்து...

விதவைகளை மறுமணம் செய்ய இளைஞர்களே முன்வாருங்கள் – மாவை எம்.பி

இளம் விதவைகளை மறுமணம் செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். விதவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை...
Ad Widget

MH-370: காணாமல்போன விமானம் பற்றி மலேசியா ஆய்வறிக்கை

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH-370 ஓராண்டுக்கு முன்னால் காணாமல் போனது சம்பந்தமாக மலேசிய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இந்த விமானத்தில் இயந்திரக் கோளாறோ, அல்லது அதன் அதன் விமானி அல்லது சிப்பந்திகளில் எவர் மீதும் சந்தேகமோ இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் விமானம் நீருக்கடியில் விழுந்துவிட்டால் சமிக்ஞை அனுப்பி இருப்பிடத்தை காட்டிக்கொடுக்கும் கருவியில் இந்த...

மகனைக் கொன்ற யானைகளுக்கே விளைச்சலை தானம் செய்த விவசாயி

கிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கும் இறுதி ஆசைகள் உண்டு. ஆனால் அந்த ஆசைகளும் இயற்கையோடு ஒட்டியே பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் மத்திய மாகாணம், தம்புள்ளை நகருக்கு அருகே இருக்கின்ற சீகிரிய பிரதேசத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கின்றது உடவலயாகம என்ற விவசாயக் கிராமம். இங்கு மண்ணையும் மழையையும் நம்பி வாழ்க்கை...

‘போக்கோ ஹராம் கடுமையான நெருக்கடியில்’ – நைஜீரியா

இஸ்லாமிய அரசு இயக்கத்தின் வழியில் பற்றுறுதி கொண்டுள்ளதாக போக்கோ ஹராம் அறிவித்திருப்பது, அந்த இயக்கத்தினர் நெருக்கடியை சந்தித்துவருவதையே காட்டுகின்றது என்று நைஜீரிய அரசாங்கம் கூறியுள்ளது. நைஜீரிய மற்றும் பிராந்திய இராணுவப் படைகளின் தாக்குதல்களின் விளைவாக, போக்கோ ஹராம் ஆயுததாரிகள் தமது வல்லமைகளை இழந்து, கடுமையான சேதங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். போக்கோ ஹராமின்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில்

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் நடந்துள்ள சூழ்நிலையில், புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். எலிசபெத் மகாராணியின் தலைமையின் கீழ் இருக்கின்ற காமன்வெல்த் அமைப்பின் தற்போதைய நிர்வாகத் தலைவரான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக...

பெண்ணியம் தமிழ்த்தேசியத்தால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது

இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம். இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி...

டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் சூர்யா

தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் தங்களது பெயரில் தனியாக பக்கம் ஒன்றை தொடங்கி வைத்துக் கொண்டு, அதில் தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றியும், வெளிநாடுகளில் தங்களது விடுமுறை நாளை ஜாலியாக கொண்டாடியது என அத்தனை விஷயங்களையும் ரசிகர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்கின்றனர். சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார்...

புலி ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாக இருக்கும்

நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்னும் நட்ராஜ், தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர் ‘மிளகா’, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். பாலிவுட்டில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். புலி படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்வது தமிழில் இரண்டாவது படமாகும். இதற்கு முன் விஜய் நடிப்பில்...

64 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 32ஆவது போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. 377 ஓட்டங்களை இலக்காக கொண்டு இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 312 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் முன்னதாக நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள்...

மூன்று நாள்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது. கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் நீராகாரத்துடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளை...

யாழ். மத்தியின் ‘சென்றல் நைட்’ வருடாந்த ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 'சென்றல் நைட்' வருடாந்த ஒன்றுகூடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலானது நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்...

அரசியல் மாற்றத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை -டக்ளஸ்

புதிய அரசு அமைந்ததும் நிறைவேற்று சபையொன்றை அமைத்து தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று கூறியவர்கள் இப்போது தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கத்துவமாக இருந்து கொண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வாய்திறக்காமலே இருப்பதை நாம் கண்டிக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 'உண்மையான...

வடக்கின் பெரும் போரில் வெற்றிபெற்றது சென்.ஜோன்ஸ் கல்லூரி!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி - சென்ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது. மத்திய கல்லூரி வீரர்கள் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை சமப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் எடுத்த நடவடிக்கைகள் யாவற்றையும் தமது வியூகத்தினால் முறியடித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்...

நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள்

வடக்கு மாகாணம் பல வழிகளிலும் நலிவடைந்துள்ள நிலையில் நிதி நிறுவனங்களின் வருகையினால் பொருளாதார நிலையில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் துறை விரிவுரையாளர் இ. இரட்ணம் தெரிவித்தார். யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் வாழ்நாள் கூட்டுறவாளருமான வீ.கே அருந்தவநாதனின் சேவைநலன்பாராட்டு விழாவும் புதிய ஆணையாளரை வரவேற்கின்ற நிகழ்வும் வடமாகாண பனை ,...

உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரியும் நீதியான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்றும் வலியுறுத்தி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 2ஆம் நாளாக நேற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. காணாமல் போனோரின் அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பல அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்போது கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல்...

இணைந்த வடக்கு கிழக்கில் தீர்வுகாண இந்தியா உதவ வேண்டும்

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச்சு நடத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர...

சிம்பு படத்தில் கெஸ்ட் ரோலில் தனுஷ்?

சிம்பு-தனுஷ் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை என்று பல மேடைகளில் அவர்களே கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு விரைவில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இரண்டாம் உலகத்தை போன்றே நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் தனுஷ் தலையை...

பின்னணி பாடகியாக உருவெடுத்த ஜெசிக்கா

உலகத் தமிழர்கள் அனைவரையும் சமீபத்தில் கவர்ந்தவர் ஜெசிக்கா. ஈழத்து சிறுமியான இவர் தன் குரலால் மட்டுமல்ல, ஈழத்தில் வாழும் ஏழைக்குழந்தைகளுக்கு தங்கம் வழங்கி தனது செயலாலும் எல்லார் மனதிலும் நீங்கா பிடித்தார். இவர் தற்போது அக்னி கணேஷ் இசையில், ஞானம் அவர்களின் வரிகளில் சரவண பொய்கை என்ற பாடல் ஒன்றை பாடியுள்ளார். சென்னையில் உள்ள ரெக்கார்டிங்...

கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர மாட்டோம்-எல்லை தாண்டினால் சுட்டுக் கொல்வோம் – ரணில்

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம், எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மிரட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்திய-இலங்கை உறவை, சீன-இலங்கை உறவில் இருந்து வேறுபடுத்தியே வைத்திருக்கிறோம். இரண்டும் எங்களுக்கு முக்கியமானவை. இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று உறவு உள்ளது. இந்திய-இலங்கை...
Loading posts...

All posts loaded

No more posts