சூரிய சக்தியின் துணையுடன் உலகம் சுற்றும் விமானம்

சூரியசக்தியில் இயங்கும் விமானம் ஒன்று உலகைச் சுற்றிவரும் அதன் ஐந்து மாதப் பயணத்தில் முதல்கட்டத்தில் உள்ளது. ஒரு துளி எரிபொருளையும் பயன்படுத்தாமல் தனியே சூரிய சக்தியை மட்டுமே கொண்டு இந்த விமானம் இயங்கக்கூடியது. சோலார் இம்பல்ஸ் டூ- என்ற பெயருடைய இந்த விமானம் தனியொரு நபர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடியது. அபு தாபியிலிருந்து ஒமான் நோக்கி...

ஐநாவின் கருத்துக்கள் எரிச்சலூட்டுகின்றன – ஆஸ்திரேலிய பிரதமர்

தஞ்சம் கோரி வருபவர்களை ஆஸ்திரேலியா நடத்தும் விதம் குறித்து ஐநாவின் சித்ரவதைகளுக்கான சிறப்புத்தூதுவர் கூறியிருக்கும் கருத்துக்கள் தம்மை எரிச்சலூட்டுவதாக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நாட்டுக்கு வெளியேயான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படும் விதம், சித்ரவதை குறித்த சர்வதேச சட்டங்களை மீறுவதாக இருப்பதாக ஐநா கூறியுள்ளது. மனுஸ்...
Ad Widget

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிரிட்டிஷ் புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே முன்றலில் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, காமன்வெல்த் தலைமையகமான மார்ல்பரோ ஹவுஸ் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் தமிழ்...

மகளிர் தினத்தில் அம்மாவுடன் வாலு படம் பார்த்த சிம்பு

நேற்று முன்தினம் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது வாலு படத்தை தனது அம்மாவுக்கும், நண்பர்களுக்கும் ஸ்பெஷலாக திரையிட்டு காட்டினார் சிம்பு. எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் வாலு படத்தை இயக்கியுள்ளார். சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள இப்படம் இந்த மாத இறுதியில் – 27 ஆம் தேதி – வெளியாகிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு...

ஜோதிகாவின் படதலைப்பு 36 வயதினிலே: சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ‘36 வயதினிலே’ என்று சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். திருமணத்துக்கு பிறகு ஜோதிகா நடிக்கவில்லை. நல்ல கதைகள் அமைந்தால் அவர் மீண்டும் நடிப்பார் என்று சூர்யா கூறி வந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் மஞ்சுவாரியார் நடித்து வெற்றிகரமாக ஓடிய ’ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் கதை இருவருக்கும் பிடித்து...

தனுஷுடன் குத்து டான்ஸ் ஆடிய அனிருத்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் அனிருத் சிறப்பு தோற்றத்தில்...

வெதுப்பகத்தை யார் நடத்துவது? கேள்வியால் திறந்த தினமே மூடப்பட்டது!

வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் திறக்கப்பட்ட பேக்கரி அன்றைய தினமே மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின், வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் வவுனியா, செட்டிகுளம், பிரமணாலங்குளம் பகுதியில் பேக்கரி ஒன்று...

மற்றுமொரு வழக்கிலிருந்து பொன்சேகா விடுதலை

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவவீரர்கள் 10 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு சம்பளத்தை வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவரை குற்றமற்றவர் என்று இனங்கண்டே நீதிமன்றம் அவரை இன்று திங்கட்கிழமை...

திருக்கேதீஸ்வரப் பகுதியில் மீளக்குடியமர மக்களுக்கு இடைக்காலத் தடை விதிப்பு!

திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை மக்கள் மீள்குடியேற வேண்டாம் என்று புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் அவர்களது சொந்த காணிகளை துப்பரவு செய்து குடியேற நேற்று ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது அந்த மக்களை குடியேறவேண்டாம் என்று பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்....

இலங்கையில் பெண் ஊடகவியலாளர்கள் மீது பாலியல் தொல்லை!

இலங்கை ஊடகத்துறையில் பணியாற்றுகின்ற 29 வீதமான பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீல்ரூக்சி ஹந்துன்நெத்தி என்ற ஊடகவியலாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 45 பெண்களில் 13 பெண்கள் (28.8%) தாம் வேலைத்தளங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகவேண்டியிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர் என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்...

ஓய்வு தினத்தை அறிவித்த சங்கா

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, தான் இந்த வருடம் ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றிற்கு இந்த தகவலை அவர் கூறியுள்ளார். நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள...

மோடியின் வடக்கு விஜயம் : இந்திய அதிகாரிகள் குழு யாழ் வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடபகுதிக்கான பயண ஒழுங்கை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் வடமாகாணத்துக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழுவில் பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும், வெளிவிவகார அமைச்சைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருப்பர். இந்தியப் பிரதமர் இரு நாள் பயணமாக எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்புக்கு வருகிறார். இந்தப் பயணத்தின்போது வடபகுதிக்கும்...

பிரதமர் ரணில் 27ல் யாழ் விஜயம்

வடபகுதி மக்களைச் சந்திப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் வடக்குக்கு வருகை தரவுள்ளார். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு முதன்முறையாக வந்திருந்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தையும், யாழ்.மாவட்ட வெயலகத்தில் நடத்தியிருந்தார். இந்த நிலையில் தேர்தலில் மாற்றத்துக்காக வாக்களித்த வடபகுதி மக்களைச் சந்தித்து...

வாழ்வாதார உதவிகளுக்காக இதுவரை 40 ஆயிரம் பேர் பதிவு! விண்ணப்ப திகதி 31 வரை நீடிப்பு

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில் 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவுகளை மேற் கொள்வதற்கான கால எல்லை இந்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் பதிவுகளுக்கான காலம் முடிவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. உதவிகளைப் பெறப் பதிவு செய்பவர்களுக்கு...

கோட்டாவுக்கு வெளிநாடு செல்லத்தடை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவு இன்று திங்கட்கிழமை காலை 10.33 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்களவர்களையும் குடியேற்றவேண்டும்! வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்!!

வவுனியாவின் எல்லையோரங்களில் இருந்த சிங்கள மக்களையும் மீள்குடியேற்ற வேண்டும் என கூட்டமைப்பு சார்பு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவினில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- நாம் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. எல்லா மக்களையும் ஒன்றிணைத்துச் செயற்பட...

ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பது எமது கடமை – சம்பந்தன்

இலங்­கையில் காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையில் ஒரு­வ­ருக்கும் நம்­பிக்­கை­யில்­லா­விட்­டாலும், அதில் தமது முறைப்­பாட்டை பதிவு செய்­வது கடமை என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். இலங்கை வந்­தி­ருக்கும் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவ­ராஜை சனிக்­கி­ழ­மை­யன்று சந்­தித்துப் பேசி­யது குறித்து, பி.பி.­சிக்கு அளித்த பிரத்­யேக செவ்­வி­யின்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்....

கிராமப்புற உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வசதி இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் உள்ள குடும்பங்கள் தமது வருமானத்தின் பொருட்டு மேற்கொண்டு வரும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை உரிய முறைகளில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாக கூறுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குடிசைக் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது உற்பத்தி...

வடமாகாணத்துக்கு புதிதாக 31 பேருந்துகள்

வடமாகாணத்துக்கு புதிதாக 31 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்வர் சனிக்கிழமை (07) தெரிவித்தார். 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்த பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவை முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், காரைநகர், கிளிநொச்சி, பருத்தித்துறை சாலைகளுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளன. இவற்றை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும்...

வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை

வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தென்னிலங்கை ஊடகவியலாளர் அமைப்பு சனிக்கிழமை (07) தெரிவித்துள்ளது. தென்னிலங்கை ஊடகவியலாளர் யாழ். ஊடக அமையத்தில் வடபகுதி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவ்வமைப்பின் ஊடகவியலாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 'வடபகுதியில் கொலை செய்யப்பட்ட காணாமல் போன மற்றும் அச்சுறுத்தப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts