யாழில் மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையைப் பார்த்து வாய் பிளந்து நின்ற பிரதமர் (Photos)

காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து நின்ற பிரதமர் மாளிகையை சுற்றிச் சுற்றிப் பார்த்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றது. வடக்கிற்கு 3 நாள் விஜயமாக வருகை தந்திருக்கும் பிரதமர் நேற்றய தினம் காங்கேசன்துறை மற்றும் பலாலி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது காங்கேசன்துறை பகுதியில் மஹிந்த...

கிராமியப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு காத்திரமானது – டக்ளஸ்

கிராமியப் பொருளாதாரத்தைப் பாதுகாத்து பலப்படுத்துவதற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமானதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மாதர் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சமூகத்தில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய...
Ad Widget

கல்வியில் முன்னேற்றத்தை காணாவிட்டால் வடபகுதி அதிபர்களுக்கு இடமாற்றம்!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட மாவட்டங்களாக கருதி அப்பகுதி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்க கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். யாழ். கச்சேரியில் இடம்பெறும் வட மாகாண அதிபர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சு மற்றும்...

பிரியந்த சிறிசேனவில் இறுதி சடங்கு திங்கள் இடம்பெறும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும். அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பரொருவரினால் கடந்த 26ஆம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான...

யாழ். இந்துவுக்கு கல்வி அமைச்சர் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர்.இராதாகிருஷ்ணன் யாழ்.இந்துக் கல்லூரிக்கு பயணம் மேற்கொண்டு எதிர்கால அபிவிருத்தி குறித்து கேட்டறிந்து கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அமைச்சரைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்கினார். யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அமைச்சரை வரவேற்றனர். அத்துடன் கல்லூரியில்...

தேசிய விளையாட்டு விழா 2016 இல் யாழ்ப்பாணத்தில்

2016ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு விழா யாழ்.மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ரணில் தனது பயணத்தின் ஒரு கட்டமாக யாழ்.மாவட்டத்திற்கு சென்றிருந்த போது யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், தேசியத்தில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் 2016ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு...

ஆதீனமுதல்வர், யாழ். ஆயர் ஆகியோருடன் பிரதமர் ரணில் சந்திப்பு!

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்து வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் நல்லை ஆதீனத்துக்குச் சென்று நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்துப் பேச்சுநடத்தினார். இந்தச் சந்திப்பில் பிரதமருடன் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மகளிர்...

தனியார் காணிகளில் இராணுவ பயன்பாடு; ரணில் ஆராய்வு

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவம் பொருளாதார ரீதியில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுவது தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த...

புதிய அரசுக்கு ஆதரவளிப்பது அமைச்சு பதவிக்காக அல்ல! – மாவை

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர் குழுவினருக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட...

வடக்கில் பெண்கள் தலைமையில் குடும்ப நலன்களைக் கவனிக்க புதிய அலுவலகம்!

வட மாகாணத்தில் உள்ள பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் நலன்களைக் கவனிப்பதற்கென தலைமையகம் ஒன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக ​நேற்று (27) விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில்...

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதியின் சகோதரர் உயிரிழந்தார்

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த பிரியந்த சிறிசேனவுக்கு உயிரிழக்கும் போது வயது 40 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. பொலனறுவை...

வடமாகாண மக்களுடைய அவசிய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள் பிரதமரிடம் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் கையளிப்பு!

உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும் கோரிக்கைகளை இன்றைய தினம் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஈழ மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளித்தார். இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் நிலவும் அத்தியாவசியப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில்...

சென்.ஜோன் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்ப்பாண சென்.ஜோன் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது கல்வி இராஜாங்க அமைச்சு இவ் அனுமதியை வழங்கியுள்ளது. இந்த பாடத்திட்டத்துக்கான கட்டடத்தை பாடசாலை நிர்வாகம் தனது சொந்த பணத்தில் அமைக்கவுள்ளதுடன் அதற்கான பொருட்களையும் தனது சொந்த நிதியிலே பெறவுள்ளது. இந்த திட்டத்துக்காக 60 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாக...

பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடம்

கோடாரியினால் தாக்கப்பட்ட படுகாயமடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இதேவேளை, அவர் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 34 வயதான லக்மால், பக்கமுன பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு சரணடைந்தார்....

60 கிலோகிராம் கஞ்சா மீட்பு

இளவாலை, சேந்தாங்குளம் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோகிராம் கஞ்சா பொதிகளை வியாழக்கிழமை (26) மாலை மீட்டதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுள டீ சில்வா, வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். கடற்கரைக்கு அருகிலுள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி பொதி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சா பொதி...

இலங்கையர் மூவர் இந்தியாவில் கைது!

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கத் தமிழர்கள் மூவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் பல்லாவரம் அருகில் உள்ள பொழிச்சலூர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இவர்கள் பதுங்கியிருந்த சமயம் கைதுசய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதான துஸ்யந்தன், 30 வயதான லிங்கேஸ்வரன் மற்றும்...

சிம்புவை இயக்கும் கிருத்திகா உதயநிதி

'வணக்கம் சென்னை' படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிம்பு. சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான படம் 'வணக்கம் சென்னை'. அனிருத் இசையமைத்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி அடுத்து என்ன படம் இயக்கவிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது....

தேசிய விருது பெற்ற குழந்தைகளுக்கு தங்க சங்கிலி!

62-வது தேசிய விருதுக்கான படங்கள் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘காக்கா முட்டை’ படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது பெற்றது. மேலும் இதில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றது. எம்.மணிகண்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும், வெற்றிமாறனின் க்ராஸ்...

இந்தியாவை மற்ற அணிகள் தொடர்ந்து தோற்கடிக்க வேண்டுமாம்!

உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்வி பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று எல்லா சமூக ஊடகங்களிலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் வேளையில், என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை, இந்திய அணியை மற்ற அணிகள் தோற்கடித்துக் கொண்டே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில்...

தற்கொலையை தடுக்க புதிய வழி

அன்றாட வாழ்வில் சிக்கலை சந்திக்கும் பெரும்பாலானோர், அதிலிருந்து மீள வழி தெரியாத போது தற்கொலையை தான் தங்களின் ஒரே தீர்வாக தேர்ந்தெடுக்கிறார்கள். இதை தடுக்க கவுன்சிலிங், சேவை மையங்கள் என பல வழிகளை அரசுகள் பயன்படுத்தி வந்தாலும், தற்கொலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தென்கொரியாவில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள், அரசுக்கும், பெற்றோருக்கும் பெரும்...
Loading posts...

All posts loaded

No more posts