Ad Widget

இலங்கையர் மூவர் இந்தியாவில் கைது!

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கத் தமிழர்கள் மூவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் பல்லாவரம் அருகில் உள்ள பொழிச்சலூர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இவர்கள் பதுங்கியிருந்த சமயம் கைதுசய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதான துஸ்யந்தன், 30 வயதான லிங்கேஸ்வரன் மற்றும் 28 வயதான விஜயராஜ் ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் பணம் செலுத்தியதாகக் கூறி இலங்கை அகதி ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் துஸ்யந்தனும், லிங்கேஸ்வரனும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடந்த வருடம் இந்தியாவுக்கு சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts