இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்து வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் நல்லை ஆதீனத்துக்குச் சென்று நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்துப் பேச்சுநடத்தினார்.
இந்தச் சந்திப்பில் பிரதமருடன் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கூட இருந்தனர்.
இதேவேளை நேற்று மாலை 6 மணியளவில் யாழ். ஆயர் இல்லத்துக்குச் சென்ற பிரதமர் ரணில் அங்கு யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளாரை சந்தித்துச் பேச்சு நடத்தினார்.