- Thursday
- May 2nd, 2024
தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகைகளில் ஒருவர் சுஹாசினி மணிரத்னம். பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான சுஹாசினி ஐரோப்பாவில் உள்ள “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நியமிக்கப்பட்டார். சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் அந்த நாட்டின் தூதுவரான சாம்...
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு...
உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. சிட்னியில் நிறைவடைந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதனையடுத்து துடுப்புடன் களமிறங்கிய அந்த அணியினர் தென்னாபிரிக்க வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாது வரிசையாக வௌியேறினர்....
மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானாக கறுப்பையா ஜீவராணி நியமிக்கப்பட்டுள்ளாலர்.இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவனாக கடமையாற்றிய அவர், நீதி அமைச்சின் பரிந்துரைக்கு அமைய, இன்று புதன்கிழமை (18) முதல் அமுலுக்கும் வரும் வகையில் இந்த நியமனத்தை பெற்றுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய திருமதி ஜோய் மகிழ்மகாதேவன்,...
நாடு பூராவும் ரொடா வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இக்காய்ச்சல் கண்டவர்கள் பெரசிட்டமோல் மருந்தைத் தவிர வேறு எதுவும் உட்கொள்ளக் கூடாது எனவும், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலுக்கு உட்பட்டவர்கள் அவசரமாக வைத்திய நிபுணர்களைச் சந்திக்கும்படியும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வாந்தி, தலைவலி, கடும்காய்ச்சல், மலம் கழிக்கும்போது அல்லது வாந்தியெடுக்கும்போது இரத்தம்...
முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இன்று அவர், அரசியல் கட்சித் தலைவர்கள் புலனாய்வுப் பிரிவின் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. 20ஆம் திகதி அவர் இலங்கை திரும்புவார்.
சுவிஸ் அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இன்று புதன்கிழமை சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் திறந்துவைத்து பயனாளிகளிடம் கையளித்தார். தொண்டமானாறு, அக்கரைப்பகுதியில் இந்த வீட்டுத்திட்டம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுவிஸ் அதிகாரிகள் ஹலோட்ரஸ்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை வரையான கரையோர வீதி அமைக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானம் வடமாகாண சபையில் நேற்று ஏக மனதாக நிறைவேற்றப் பட்டது. வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த பிரேரணையை நேற்றுச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். கிழக்கு மாகாணம் திருகோணமலையிலிருந்து கொக்கிளாய் ஆற்றினூடாக அமைக்கப்பட இருக்கும் பாலத்தினூடான கரையோரப் பாதையானது, முல்லைத்தீவு நகர் வரையிலும் பின்னர்...
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர், செவ்வாய்க்கிழமை(17) மாலையில் உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 15ஆவது கஜபா றெஜிமென்ட் படைப்பிரிவை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் வசந்தகுமார (வயது 35) என்பவரே உயிரிழந்தார். கடந்த 15ஆம் திகதி விடுமுறையில் செல்ல கொடிகாமம் புகையிரத நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்த இவரை, பின்னால் வந்த வாகனமொன்று...
வடமாகாண முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாயில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (17.03.2015) சென்று,மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இராணுவத்தால் முகாம்களை அமைப்பதற்கு எனவும், உயர்பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்கெனவும் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்கக் கோரிஇடம்பெயர்ந்த மக்கள் பல தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக வலிகிழக்கு...
இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி இன்று (18) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்று வருகிறது. உலகக் கிண்ணத் தொடரில், முதலாவது காலிறுதிப் போட்டி இன்று பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில்...
இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகளுக்கென ஜப்பான் 164 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. ஜப்பான் அரசு இலங்கை மனிதவள பாதுகாப்பு திட்டத்துக்கு மானியமாக 12 லட்சத்து 66,738 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ‘MAG (Mines Advisory Groups) மக்’ நிறுவனத்தினால் செயற்படுத்தப்படும் மன்னார் மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றுதலின் மூலம் மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி செய்யும்...
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். தேசிய நிறைவேற்றுச் சபையின் நேற்றைய கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். நேற்றைய கூட்டம்...
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள் மூவரையும் அதிலிருந்து விடுதலை செய்துகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும், இது விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதியின் விசேட தூதுவராக அங்கு செல்வதற்கு அமைச்சர் ஹக்கீம் தயார் நிலையிலேயே இருக்கின்றார் என்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்....
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதியில் 1000 ஏக்கரை விடுவிப்பது என்ற அறிவிப்பின் படி முதற்கட்டமாக 400 ஏக்கரை விடுவித்து, அதில் மக்களை மீளக்குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் கலந்துகொள்வர். -...
கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து தற்போது விடுவிக்கப்பட்டு, மீள்குடியேற்றத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவு மக்கள் விடுத்த அவசர கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வளலாயில் தமது காணிகளை துப்புரவு...
வடமாகாண சபையின் செயற்பாடுகளை வெளியிடக்கூடிய வகையில் வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்துக்கு தனியான இணையத்தளம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை(17) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே, அவைத்தலைவர் இந்த பிரேரணை...
கிளிநொச்சி, புதுக்காட்டுச் சந்தியில் இன்று புதன்கிழமை (18) அதிகாலை பாரவூர்தியொன்று மரத்துடன் மோதியதால், பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். பாரவூர்தியின் உரிமையாளரும் சாரதியுமான இரத்தினசிங்கம் தர்மசிங்கம் (வயது 51), ஆவரங்காலைச் சேர்ந்த தெய்வம் ரங்கநாதன் (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு...
யாழ்ப்பாணம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது என்று பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தரை நீக்குமாறு விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பிரபாத் ஜய சிங்க தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முறையாக...
இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ்வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார். காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை...
Loading posts...
All posts loaded
No more posts