Ad Widget

நாவற்குழி – தச்சன்தோப்பு ரயில் நிலையம் மீது விஷமிகள் தாக்குதல்!

நாவற்குழி – தச்சன்தோப்பு ரயில் நிலையம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த நிலையத்தில் ஊழியர்கள் எவரும் இல்லாத பிற்பகல் 3 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் கண்ணாடிகள் மற்றும் மலசலகூடக் கதவுகள் என்பன உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அந்தப் பகுதியில் மதுபானப் போத்தல்கள் உடைக்கப்பட்டு காணப்படுகின்றன. சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts