யாழில் திருமண மண்டபங்களுக்கு தட்டுப்பாடு

திருமணம் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் மாதமாக ஓகஸ்ட் மாதம் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் திருமண மண்டபங்களுக்கு பெரும் தட்டுப்பாடடு நிலவுகின்றது. வீடுகளில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகள் நடைபெறும் வழக்கம் மாறி, மண்டபங்களில் நடத்தும் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் தற்போது பரவலாக பரவி வருகின்றது. திருமண மண்டபங்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஆலயங்களிலும் திருமண மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன....

தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கு ஆய்வுக் கட்டுரைகள் கோரல்

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எமது கலை இலக்கியங்களில் சமகால நிலைமையினை மதிப்பிடுவதும் எதிர்காலத்துக்கான செயல்நெறியினை இனங்காண்பதையும் நோக்காகக்கொண்டு ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது. 'ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் உலகமயமாதல் உள்ளூர் மயமாதலும்' என்ற கருப்பொருளிலே ஆய்வுக்...
Ad Widget

 ரயில் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் புதன்கிழமை (26) இரவு இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மல்லாகம், நாக்கியபுலத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஜெயராசா (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புகையிரதம் வரும் வேளையில் ரயில் பாதையை கடக்க முற்பட்ட போது...

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை

மனைவியை அடித்து போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம்...

போர்க்குற்ற வலையிலிருந்து தப்பியது இலங்கை?

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு உள்ளகப் பொறிமுறையொன்றை வலியுறுத்தவுள்ளதாகவும் அமெரிக்கா நேற்று புதன்கிழமை (26) அறிவித்தது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக்...

கூட்டமைப்பு ”ஈபிஆர்எல்எப்” “புளொட்” அமைப்புக்களை புறக்கணித்தது! நிஸா பிஸ்வால் சந்திப்பில் உறுதியானது!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயினும்...

கூட்டமைப்பிற்கும் உலங்கு வானூர்தி வசதி!டக்ளஸ்சை மிஞ்சிய சம்பந்தன்!

அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசின் முதலாவது மீளக்குடியமர்வு நடவடிக்கையானது இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் கிராமசேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து...

தொண்டமான், டக்ளஸ்,சம்பந்தன் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும்  ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ,தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர்  சம்பந்தன் ஆகியோர் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் ஆதரவினை தெரிவித்துள்ளனர். அதேவேளை ஜேவிபி எதிர்க்கட்சியாகவே செயற்படும் என கூறியுள்ளது.இருப்பினும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு...

த.தே.கூ காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்! – சுரேஷ்

நடைபெற்று முடிந்த தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

லைக்கா கிராம வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – சம்பந்தன்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் பூந்தோட்ட முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அமைக்கப்படும் லைக்கா கிராமத்தின் பணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிஷா பிஸ்வால் சந்திப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

யாழ்.நீதிமன்ற தாக்குதல் : நால்வருக்குப் பிணை – ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் மேலும் நால்வருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 28 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் 28 பேரும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது....

வடக்கில் பிரபாகரனுக்கு சிலை : விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் கனவு நன­வாகின்றது!!

வடக்கில் பிர­பா­க­ரனின் சிலை அமைக்­கப்­பட வேண்­டு­மென்ற விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் கனவு இன்று நன­வாகிக் கொண்­டி­ருக்­கின்­றது. வடக்­கி­லி­ருந்து இன்று சிங்­க­ள­வர்கள் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றனர் எனத் தெரி­வித்த பிய­கம சுசில தேரர், தூங்கிக் கொண்­டி­ருக்கும் சிங்­கத்தை தட்­டி­யெ­ழுப்ப வேண்டாம் என நான் அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கிறேன் என்றும் தெரி­வித்தார். பிட்­ட­கொட்டே பாகொட வீதியில் தூய்­மை­யான ஹெல உறு­ம­யவின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில்...

காணாமல் போன மீனவரை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியை மறித்து ஆறாம் கட்டை எனும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவர் சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 26.08.2015 காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்த வீதி மறியல் போராட்டமானது 11 மணிவரை இடம்பெற்றது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சல்லி கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்காக கடந்த...

புதிய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள் – நாளை பதவியேற்பு நடக்குமா?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அமைச்சர் ஆசனங்களைப் பங்கீடு செய்வதில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. இருதரப்பும் இன்னமும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வராத நிலையில், ஏற்கனவே அமைச்சரவை பதவியேற்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

கட்சியின் செயலாளருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன் – அங்கஜன்

தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன் தனது இராஜினாமாக் கடிதத்தை வடமாகாண சபைக்குச் சமர்ப்பிக்கவில்லையென அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (25) சபையில் தெரிவித்திருந்தார்....

தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கிய கொடூரம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை ஆடைகளைக் களைந்து கொடூரமாக இலங்கை கடற்படை தாக்கிய சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 600 க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு (திங்கள்கிழமை) மீன்பிடித்துக்...

ஜப்பானையும், பிலிப்பைன்ஸையும் உலுக்கிப் போட்ட “டைப்பூன் கோனி”

ஜப்பானையும், பிலிப்பைன்ஸ் நாட்டையும் தாக்கிய புயலான "டைப்பூன் கோனி" புயலுக்கு ஜப்பானில் இதுவரையில் 13 பேரும், பிலிப்பைன்ஸில் 36 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புயலால் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரண்டு நாடுகளும் உருக்குலைந்து போயுள்ளது. கோனி புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் கடந்த சில...

5500 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நியமனம்

அரச சேவையில் 5500 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச துறையில் தொழில்வாய்ப்பு கிடைக்காதவர்கள் முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே, கடந்த காலத்தில் விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் இம்முறை உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இவர்களுக்கான நியமனக்...

வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாகாணசபை நடவடிக்கை எடுக்கும் : வடக்கு முதல்வர்

வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வடமாகாண சபை உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாகாண சபையின் 33ஆவது அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி்.தவராசா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பின்னர் மாகாண,...
Loading posts...

All posts loaded

No more posts