Ad Widget

 ரயில் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் புதன்கிழமை (26) இரவு இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகம், நாக்கியபுலத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஜெயராசா (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புகையிரதம் வரும் வேளையில் ரயில் பாதையை கடக்க முற்பட்ட போது அவர் தடக்கி வீழ்ந்து ரயிலில் மோதுண்டுள்ளார்.

இச்சம்பவத்தால் நிறுத்தப்பட்ட ரயில் சிறிது நேர தாமதத்தின் பின்னர் பயணத்தை மேற்கொண்டு காங்கேசன்துறை சென்றடைந்தது. சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts