Ad Widget

முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கால்பந்து சுற்றுப் போட்டி : அக்கினி சிறகுகளிடம் ரி.ஐ.டி விசாரணை?

அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18...

மெரினா கடற்கரையில் முள்ளிவாய்கால் அஞ்சலி

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மெரினா கடற்கரையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், வைகோ கலந்துகொண்டார். கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா...
Ad Widget

‘முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல’

முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்,...

நாடாளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை, கடந்த வியாழக்கிழமை சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா, சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை புறக்கணித்த மூவர்!!

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், இந்நிகழ்வின் பிரதான வைபமாக...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு! முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மே 18 நாளான இன்று, வடக்கு மாகாணத்தில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று, வர்த்தக சங்கங்கள் அறிவித்தல் விடுத்தன. இதனையடுத்து, 'வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை, தமது தேசியக்...

யாழ் பல்கலையில் நினைவேந்தல் நிகழ்வு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள், அனைத்துப் பீட மாணவர்கள், கல்விசார ஊழியர்கள் அனைவரும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

வடக்கில் தடையின்றி நினைவுதினம் அனுஷ்டிக்கமுடியும்!

உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு எந்தத் தடையுமில்லை. அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் வடக்கில் உயிர்நீத்த அனைவருக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தமுடியும். இந்தச் செயற்பாடுகளில் பாதுகாப்புப் படையின் எந்தவொரு தலையீடும் இருக்காது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும் வடக்கில் அஞ்சலி செலுத்த முடிந்தாலும் விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்தோ அல்லது புலித் தலைவர்களின் படங்களை வைத்து...

சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்- முள்ளிவாய்காலில் விக்னேஸ்வரன்

சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை...

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வடக்கு முதலமைச்சர்

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரமம்பமாகி இடம்பெறுகின்றது. வணக்க நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விபரம். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

வடமாகாண சபையின் நினைவேந்தல் நிகழ்வு

வட மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் செய்திக் குறிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. '2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள்....

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு உயரிய சபையில் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இந்த உயரிய சபையில், அனைவரின் சார்பாகவும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு...

முள்ளிவாய்க்கால் பேரவல நாள் இன்று! இழந்த உறவுகளுக்கு தரணி எங்கும் நினைவுகூரல்!!

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நடந்த 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை வடக்கு - கிழக்கான தமிழர் தாயகத்திலும், தரணி எங்கும் நினைவு கூரப்படுகின்றது. பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளன. இவற்றுக்கான ஒழுங்குகளை வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள்...

தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்! – முள்ளிவாய்க்காலில் அணிதிரளுமாறு மாவை எம்.பி. அழைப்பு

"போரில் உயிர்ப்பலியானோருக்கு மட்டுமல்ல, தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்குமாக இன்று மே 18இல் ஒன்றுகூடி பிரார்த்திக்க வேண்டும். அதற்கு வன்னி மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பொருத்தமான இடமாகும் என எண்ணுகின்றோம். எனவே, மே 18இல் அனைவரும் எமது விடுதலை என்ற இலக்கை அடைவதற்கும், இழந்த உயிர்களின் ஆத்ம சாந்திக்காகவும், ஆன்ம ஈடேற்றத்துக்கும் ஒன்றுபட்டு தம் திடசங்கற்பத்தை வெளிப்படுத்துவதே...

யுத்த வெற்றி விழா இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது!

யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு...

உயிர்நீத்த எமது உறவுகளுக்கு உணர்வோடு அஞ்சலி செலுத்துவோம்!

உயிர்நீத்த எமது உறவுகளுக்கு உணர்வோடு அஞ்சலி செலுத்த அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிகழ்வு மே – 18ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக முன்றலில் காலை 10.00 மணிக்கு இடம்பெறும் எனவும் பல்கலைக்கழக ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யுத்த விதிகளை மீறி தனி...

தமிழின அழிப்பு நினைவுநாள், ஒற்றுமையாய் நினைவு கூறுவோம்

ஐ, நா. சபையின் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வெளியேற்றப்பட்ட பின்னணியில் நவீன உலக ஊடகத்துறை இருளில் வைக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் பார்த்திருக்க வன்னி மண்ணில் நடத்தப்பட்டஅந்தக் கொடூரம், பின்னர் காணொளிகளகக் கசிய, சனல் 4 போன்ற ஊடகங்களின் வெளியீடுகள் அவற்றை தெளிவாகப் போர்க்குற்றங்களாக நிரூபித்து ஆவணத் தொடர்கள் வெளியிட, ஐ....

விசாரணைக்குத் தயாரா? சந்திரிகாவுக்கு சிவாஜிலிங்கம் சவால்!

நவாலி, செம்மணி, நாகர்கோவில் படுகொலைகள் குறித்த விசாரணைகளுக்குத் தயாரா என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் சவால் விடுத்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். தமிழினப் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வு நேற்றய தினம் நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானோருக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வை...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!

"நாட்டை சூறையாடிய பயங்கரவாதிகளை மே 18இல் நினைவுகூர வடக்கு மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசும் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது." - இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மே 18ஆம் திகதி முள்ளிவாய்காலில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல்...

முள்ளிவாய்க்காலில் மாணவி ஒருவரின் இதய அஞ்சலி!

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இறந்த தனது உறவினர்களுக்காகவும், முள்ளியவளையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மாணவி ஒருவர் பள்ளிச் சீருடையில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனவிடுதலைப்போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் தனது மக்களின் விடுதலைக்காக முதன்முதலாக உயிர் நீத்த முதல் மாணவ வீரன் பொன் சிவகுமார்...
Loading posts...

All posts loaded

No more posts