Ad Widget

செம்மணியில் ஈகைச் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பிக்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று காலை செம்மணிப் புதைகுழியில் ஈகைச் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பல தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட செம்மணி மண்ணில் இன்று காலை 9.30 மணியளவில் கூடிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி, க.விந்தன், பா.கஜதீபன் மற்றும் வடக்கு மாகாண சபை எதிர்க் கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தி ஈகைச்சுடரேற்றி முள்ளிவாய்க்கால் வாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts