Ad Widget

யாழ்.பல்கலை மாணவர் படுகொலை ; ஐந்து பொலிஸார் மீண்டும் விளக்கமறியலில்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர்கள்...

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கொலை: பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த 20ஆம் திகதி...
Ad Widget

யாழ். மாணவர்களின் கொலை வழக்கை திசைதிருப்ப முயற்சி!!

ஆவா குழுவை காரணம் காட்டி, குமாரபுரம் படுகொலை வழக்கைப் போன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கையும் வட மாகாணத்திற்கு வெளியே அநுராதபுரம் போன்ற பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கான முயற்சி இடம்பெறுகின்றதா என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் இராணுவ தளபதி ஒருவருமே ஆவா குழுவை உருவாக்கி வழிநடத்தியதாக...

அரசாங்கத்திற்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ் பல்கலைக்கழகத்தின் இரு கலைத்துறை மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து பீடங்களின் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.றஜீவன் தெரிவித்தார். எவ்வாறாயினும் ஒரு மாத காலத்தில் நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் பேராட்டத்தை ஆரம்பிப்பதாக அவர் கூறினார். கடந்த மாதம்...

யாழ் பல்கலைக்கழகம் வழமைக்கு திரும்பியது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று புதன்கிழமை (02) முதல் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார்...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரி யாழ். விரைவு

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் குறித்த பொலிஸாரின் விசாரணை தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ இது தொடர்பாக தெரிவிக்கையில் இதுபற்றி ஆராய்வதற்கென ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். அவரது அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் . செயலாளர்...

யாழ் பல்கலை மாணவர்களின் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனாதிபதி இணக்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று...

யாழ் பல்கலை மாணவர் கொலை வழக்கு அனுராரபுரத்திற்கு மாற்றப்பட வேண்டும்

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, உடனடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது. கடமையை செய்த காரணத்தால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் அதேவேளை அவர்கள் சார்பில் தமிழில் வாதக்...

பல்கலைக்கழக மாணவர்களின் நிர்வாக முடக்கப்போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடக்கப்போராட்டம் மத்திய அமைச்சர் சுவாமிநாதன் உடனான பேச்சுவார்த்தைகளின் பின் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து  மதியம் 12.30 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் நீண்ட பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்....

யாழ்.பல்கலையில் அமைச்சர் சுவாமிநாதன்! மாணவர் நிர்வாகத்தை முடக்கினர்!

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இன்றைய தினம் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்துள்ளார். இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவியலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்தனர்...

ஜனாதிபதி இன்று உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்திப்பார்!

யாழ்ப்­பா­ணத்­திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வலி­வ­டக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கான வீடு­களை கைய­ளிக்­க­வுள்­ள­துடன் வலி­வ­டக்கில் மேல­தி­க­மாக 460ஏக்கர் காணி­க­ளையும் பொது­மக்­க­ளிடம் மீள வழங்கவுள்ளார். கடந்த 26வரு­டங்­க­ளுக்கு முன்னர் வலி­வ­டக்கு பகு­தியில் இருந்து குடா­நாட்டில் அப்­போது காணப்­பட்ட அசா­தா­ரண நில­மை­யினால் மக்கள் இடம்­பெ­யர்ந்து தற்­கா­லிக நலன்­புரி முகாம்­க­ளிலும் உற­வினர் வீடு­க­ளிலும் தங்­கி­யி­ருந்­தனர். இவ்­வா­றான...

யாழ் பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளும் மாணவர்களால் முடக்கப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் முன்னரே முடக்கப்பட்ட நிலையில் இன்று நிர்வாகச் செயற்பாடுகள் மாணவர்களால் முடக்கப்பட்டுள்ளது. மாணவர் கொலை தொடர்பில்  தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை நிர்வாகச்செயற்பாடுகள் மடக்கப்படும் என மாணவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியைச் சந்திக்கக் கோரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரூடாகவே விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் கொல்லப்பட்டமை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தக் கோருவதற்கும், கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு வழங்கக் கோருவதற்குமே சிறிலங்கா அதிபரைச் சந்திக்க மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது....

துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய மாணவர்களின் குடும்பங்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பயணம் செய்யவுள்ளார். கீரிமலைப் பிரதேசத்தில் வீடற்றோருக்கு புதிய வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் குறித்த வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை...

யாழ் சம்பவம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு

யாழ் சம்பவம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு யாழ் மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே கூறினார். குறித்த குழு கடந்த தினங்களில் யாழ் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக அவர் கூறினார். கடந்த 20ம்...

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை; வேறு சூழ்ச்சிகள் உள்ளதா? சுமந்திரன்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதாவது சக்திகள் இயங்கியிருந்தால், அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார். மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை ஒரு...

ஆளுநர் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய பல்கலை மாணவர்கள்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புவதாகத்...

மாணவர்கள் கொலை: விசாரணைகள் பற்றிய தகவல்களை வெளியிடத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை தகவல்களை வெளியிடவேண்டாமென விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு சிறீலங்கா காவல்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொக்குவிலில் கடந்த வியாழக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை தொடர்பாக சிறீலங்காக் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விசாரணையை முன்னெடுக்க விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன....

யாழ். விவகாரம் சூடுபிடிப்பு: செய்தியாளர் மாநாட்டிலிருந்து ​அமைச்சர் வெளியேறினார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில், கலந்துகொண்டிருந்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரத்னாரத்நாயக்விடம், யாழ். மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். இதன்போது அமைச்சர் ரத்நாயக்க, திடீரென அவ்விடத்தை விட்டு எழுந்துச் சென்றார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் சோதனை!! துப்பாக்கி ரவையின் கூடு மீட்பு!!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சம்பவம் இடம்பெற்ற குளப்பிட்டி பகுதியில் தடயவியல் பொலிஸார் இன்று மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைகளின் கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

 மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சற்று தூரத்தில் கொக்குவில் சந்தைக்கு முன்பாகவுள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ். பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார்...
Loading posts...

All posts loaded

No more posts