Ad Widget

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் சோதனை!! துப்பாக்கி ரவையின் கூடு மீட்பு!!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சம்பவம் இடம்பெற்ற குளப்பிட்டி பகுதியில் தடயவியல் பொலிஸார் இன்று மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைகளின் கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.



மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சற்று தூரத்தில் கொக்குவில் சந்தைக்கு முன்பாகவுள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ். பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்போது துப்பாக்கி ரவை கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் துப்பாக்கி தோட்டாவின் வெற்றுக்கோது ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, 5 பொலிஸாரும் இன்று புதன்கிழமை (26) காலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சம்பவம் பற்றிய விபரம் பெறப்பட்டுள்ளது.

கை விலங்கிடப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன், சிறைசாலை பாதுகாப்பு அதிகாரிகளினால் 5 பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கடந்த 20ம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Posts