Ad Widget

குடியேற்ற நடைமுறைகளில் மாற்றம் தேவை – ஆஸி. பிரதமர்

ஆஸ்திரேலியாவின் சட்ட மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்போட் கூறியுள்ளார். சிட்னியில் கடந்த டிசம்பரில் ஆயுததாரி ஒருவர் பணயம் வைத்திருந்த இருவரை கொன்ற சம்பவத்தின் பின்னணியிலேயே பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது. இரானிலிருந்து வந்து குடியேறியிருந்த- குறித்த இஸ்லாமியவாத ஆயுததாரி ஏற்கனவே கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த...

ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்?

துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. [caption id="attachment_40563" align="aligncenter" width="625"] கொல்லப்பட்ட பெண்ணின் படத்தோடு பலர் போராட்டங்களில் பங்கேற்றனர் [/caption] கொல்லப்பட்ட...
Ad Widget

இராக்கில் 45 பேர் எரித்துக் கொலை

இராக்கின் மேற்கு நகரான அல்-பாக்தாதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் 45 பேரை எரித்துக் கொலை செய்துள்ளனர் என இராக்கிய பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் யார், என்ன காரணத்துக்காக எரிக்கப்பட்டுள்ளார்கள் , என்பது சரியாக தெரியவில்லை.ஆனாலும் அவர்களில் சிலர், பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் என நம்புவதாக இராக்கிய பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த...

வங்கிகளிலிருந்து கோடிகளை எப்படி கணினிக் குற்றவாளிகள் திருடினர்?

மிகவும் நுட்பமான கணினித் தாக்குதல் ஒன்றில், 30 நாடுகளில் சுமார் 100 வங்கிகளில் இருந்து பல நூறு மிலியன் டாலர்கள் பணம் திருடப்பட்டிருக்கிறது என்று ரஷ்ய கணினிப் பாதுகாப்பு நிறுவனமான “கேஸ்பர்ஸ்கி லேப்” கூறுகிறது. அவர்கள் கையாண்ட முறை என்ன ? யுக்ரெயின் தலைநகர் கீவ் பகுதியில், தானியங்கிப் பணம் தரும் இயந்திரம் ஒன்று, தாறுமாறான...

அமெரிக்காவில் பயங்கரம்.. 3 முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் வட கரோலினா பல்கலைக் கழக மாணவர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்பினால் ஏற்பட்ட இழப்பு என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட டியா ஷேடி பராக்கத், அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா, யூசுரின் சகோதரி ரஸான் அபுசல்ஹா ஆகிய மூவரும் சேப்பல்...

ஐ எஸ் மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் கோருகிறார் ஒபாமா

இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று ஆண்டு காலம் இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அதிபர் ஒபாமா கோரியுள்ளார். இத்திட்டத்தில் அமெரிக்கப் படைகள் மட்டுப்படுத்தபப்ட்ட வகையில் தரைவழித் தாக்குதல்களை முன்னெடுக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. தற்போது இராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கட்டுப்படுத்திவரும் ஐ எஸ் அமைப்பு மீது தாக்குதல்களை...

ஐ எஸ் பிடியிலிருந்த அமெரிக்கப் பெண்மணி கொலை

சிரியாவில் இஸ்லாமிய அரசு தீவிரவாதக்குழுவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண்மணி கைலா ஜீன் முல்லர் கொல்லப்பட்டுள்ளதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதிசெய்திருக்கிறார். அவர் கடந்த 18 மாதங்களாக அந்தத் தீவிரவாதக் குழுவால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். அந்த இருபத்தி ஆறு வயதான தொண்டு நிறுவன ஊழியரது கொலைக்கு காரணமானவர்களை அமெரிக்கா நீதியின் முன் நிறுத்தும்...

ஒரு குழந்தைக்கு மூன்றுபேர் பெற்றோர் என்பது சரியா தவறா?

மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள். மனித செல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும். நியூக்ளியஸ் என்பது செல்களின் மையக்கரு என்றால், இந்த மைடோகாண்டிரியாக்கள் எனப்படுபவை செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை உற்பத்தி...

சிறுவர்களை உயிரோடு புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்த ஒரு தீவிரவாத குழு, இஸ்லாமிய நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகள் என்றழைக்கப்படும் இந்த தீவிரவாத குழு ஈவு, இரக்கமற்ற அட்டூழிய செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. சமீபத்தில் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த ஜோர்டான்...

ரஷ்யச் சிறுமிக்கு இந்திய இதயம்

ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டே முக்கால் வயதுக் குழந்தை ஒன்றுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இவ்வளவு சிறிய குழந்தைக்குச் செய்யப்பட்ட முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது. [caption id="attachment_39854" align="aligncenter" width="625"] ரஷ்யக் குழந்தையும் சிகிச்சையளித்த மருத்துவர்களும் [/caption] ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்திற்கு அருகில் இருக்கும்...

வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகளை கணக்கிலிட முடியாது!

வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகள் கணக்கிலிட முடியாது, இன்னும் முப்பது வருடங்களுக்கு அதன் தாக்கத்தைத் தெரிவித்தே தீரும், எனவே போர்க்காலச் சுமைகளை அகற்றும், சுற்றாடலைச் சுத்தப்படுத்தும் காரியங்களில் எம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வது அவசியம், என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை...

இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை’ – பிரித்தானிய பிரதமர்

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இங்கு லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கையில்...

ஜோர்தானிய விமானி இஸ்லாமிய அரசின் பிடியில் இருப்பதாக ஆதாரம் இல்லை

தங்களின் விமானப் படை விமானியை இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் உயிருடன் பிடித்து வைத்திருப்பதை உறுதிப்படுத்தும் எவ்விதமான சான்றும் தமக்குக் கிடைக்கவில்லை என்று ஜோர்தான் கூறியுள்ளது. [caption id="attachment_39526" align="aligncenter" width="660"] படம்: இடமிருந்து வலமாக- மாஸ் அல்- கஸ்ஸாஸ்பி ( ஜோர்தானிய விமானி), சஜீதா அல்- ரிஸாவி (ஜோர்தான் சிறையில் உள்ளவர்), கென்ஜி கோட்டோ (...

இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களை கடலில் தடுத்து வைத்தது சரியே!

அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் கடல்வழியாகச்சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்துவைத்த அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியான செயலே என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருக்கிறது. சென்ற ஆண்டு இந்த அகதித்தஞ்சக் கோரிகளை சுமார் ஒருமாதகாலம் நடுக்கடலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் படகில் தடுத்து வைத்திருந்த செயல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. சிறு குழந்தைகள் உட்பட...

முதன்முறையாக குழந்தையை ரசிக்கும் பார்வையற்ற தாய்: நெகிழ்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

கனடாவில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது முதல் குழந்தையை சிறப்பு கண்ணாடி மூலம் முதன்முறையாக பார்த்து வியந்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் கேத்தி பீட்ஸ் (29). இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா...

வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் ரத்து

வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலப்...

சவுதி மன்னர் அப்துல்லா மரணம்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சவுதி மன்னர் அப்துல்லா காலமானார். புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் அறிவிக்கப்பட்டிருக்கிறார். புதிய மன்னராகும் சல்மான் தனது வாரிசாகவும் பட்டத்து இளவரசராகவும் அவரது உறவினர் முக்ரினை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எண்ணெய் ஏற்றுமதியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியாவின் மன்னராக 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட...

பூமிக்கு நெருக்கமாக வரும் எரிகல் – ஆபத்தா?

விண்வெளியில் ‘2004 பிஎல் 84’ என்ற பெரிய விண்கல் இருப்பது, கடந்த ஆண்டு, நியூ மெக்சிகோவில் உள்ள ‘ஒயிட் சேன்ட்ஸ் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச் சர்வே’யில் தெரியவந்தது. அந்த விண்கல் இப்போது, பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. வருகிற 26-ந் திகதி, இந்த விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும். அப்போது பூமிக்கும்,...

உலக மட்டத்தில் அதிகரிக்கும் தடுப்பு மருந்துகளின் விலை

சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலையை குறைக்குமாறும், அவை தயாரித்து விற்கப்படும் முறையில் மறுசீரமைப்புகளை செய்யுமாறு சர்வதேச மருத்துவ குழுவான எம்.எஸ்.எஃப் என்னும் எல்லைகளற்ற மருத்துவர்களின் அமைப்பு கேட்டுள்ளது. பல பொதுவான சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலை 2001இல் இருந்ததை விட 68 மடங்கு அதிகமாகும் என்று அந்த அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகின்றது. அவற்றின் விலைகளில்...

பப்புவா நியு கினி தடுப்பு முகாமில் போராட்டம் தொடர்கின்றது

பப்புவா நியு கினியில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்புமுகாமில், தாங்கள் எதிர்நோக்கும் நிலைமைகளைக் கண்டித்து தஞ்சக் கோரிக்கையாளர்கள் இரண்டு கூடாரங்களுக்குள் முடங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மனுஸ் தீவு தடுப்புமுகாமில் நடக்கும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
Loading posts...

All posts loaded

No more posts