- Thursday
- September 18th, 2025

ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 54 இலங்கையர்கள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்ப அதிலிருந்த ஆள் கடத்தல்காரர்களுக்கு 5 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டதை இந்தோனேசியா நிரூபித்துள்ளதாக 'சிட்னி மோர்னிங் ஹெரால்ட்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த செய்திக்கு ஆதாரமாக ஆள் கடத்தல்காரர்களுக்கு ஆஸ்திரேலிய அதிகாரகள் வழங்கினர் எனக் கூறப்படும் அமெரிக்க...

மலேஷிய எயார் லைனுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் தீப்பற்றியமையே இதற்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 300 பயணிகளுடன் சென்ற குறித்த விமானம் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு மெல்போன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக, விமான நிலைய அதிகாரி...

மலேசியாவின் போர்னியோ தீவிலுள்ள சபா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.0 ரிச்டர் அளவுகோலில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான கினபாலு மலையில் சுமார் 160 பேர் தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும் இவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணர்வுபுர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக...

பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்மைலி ஷியா முஸ்லிம்களை பஸ் வண்டியொன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, கராச்சி நகரில் அப்பஸ் வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 06 துப்பாக்கிதாரிகள், மேற்படி பஸ்...

'தேர்தலுக்கு முன் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறாது, தொழிலாளர் கட்சியே முன்னிலை பெறும்' என்று கூறப்பட்ட நிலையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோனின் கன்சவேட்டிவ் கட்சி, 327 இடங்களில் வெற்றிகொண்டு ஆட்சியமைப்பதுக்கு தேவையான 326 ஆசனங்களை விட ஒரு ஆசனம் கூடுதலாகப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதேவேளை, 232 ஆசனங்களை மட்டுமே வென்று தோல்வியை தழுவியுள்ள...

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சற்று முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவி்ன் படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார்....

திருமணமாகாத ஜோடிகள் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணம் செய்வதற்கு தடைவிதிப்பதற்கு ,இந்தோனேசியாவின் அச்சே மாகணத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு அச்சே பகுதியில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த புதிய சட்டம், உள்ளூர் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது....

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டுவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பழமைவாய்ந்த கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 3...

நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. நேபாளம் தெற்கு கோடாரி எனுமிடத்திலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதேவேளை, நேபாளம், காத்மண்டிலிருந்து 50 மைல் தூரத்தில் ஆறுமைல் ஆழத்துக்கு அடியில் 7.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 2,000 க்கும் மேற்பட்டவர்கள்...

காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மண்டுவில் இருந்த19-ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டிடத்தில் இருந்த 50 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இன்று முற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்...

நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில் 7.5 ரிச்டர் அளவிவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இந்த நில அதிர்வு டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சுமார்...

அவுஸ்திரேலியாவினால் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் உட்பட பல்நாட்டு அகதிகள் நவுறு தீவிலிருந்து கம்போடியாவில் குடியமர்த்துவதற்காக அங்கு அனுப்பப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் கூறியது. கம்போடிய தலைநகரான 'நொம்பென்' இல் குடியேற்றப்படுவதற்காக முதல் தொகுதி அகதிகள் விசேட விமானத்தின் மூலமாக திங்கட்கிழமை அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான கம்போடியாவும் அவுஸ்திரேலியாவும் இருபக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கம்போடியாவுக்கு அனுப்பப்படவுள்ளவர்களில்...

புருணே சுல்தான் ஹசன் அல் போல்கியாவின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான அப்துல் மாலிக்கின் திருமணம் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஆடம்பரமாக தங்கங்களை கொட்டி நடைபெற்றது. மணமக்கள் இருவரும் தங்கம், வைர நகைகளில் ஜொலித்தனர். புதுமண தம்பதிகளை காண தலைநகர் பண்டர் செரி பெகவனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஒரு கோடியில் இருந்து பார்த்தால்...

பேர்ள் ஹார்பர் தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமது படையினரின் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. [caption id="attachment_43229" align="aligncenter" width="624"] யுஎஸ்எஸ் ஒக்லஹோமா கடற்படைக் கப்பலில் இருந்த படையினர் ஹவாயில் புதைக்கப்பட்டுள்ள இடம் [/caption] இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தலையிட பேர்ள் ஹார்பர் மீது ஜப்பான் நடத்தியத் தாக்குதல் முக்கியமான காரணமாக...

லிபியா அருகே நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 400 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு சண்டையை அடுத்து திருட்டு தனமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில்...

தென் ஆப்ரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தபட்டுள்ளது தொடர்பில் ஒருவர் வழக்கை எதிர்கொள்ளவுள்ளார். தீய எண்ணத்துடன் அவர் காந்தியின் சிலையை சேதப்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. ஜொகனஸ்பர்க் நகரிலுள்ள அவரது சிலையின் மீது கடந்த சனிக்கிழமை வெள்ளை பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் ஐந்து லிட்டர் பெயிண்ட் வாளியும், 'காந்தி போக...

ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல்...

சுமார் இரண்டு மாதங்களாக கடலில் தன்னந்தனியாகத் தவித்துவந்த ஒருவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். மீன்களை உண்டும் மழை நீரைக் குடித்தும் அவர் உயிரைத் தக்கவைத்திருந்தார். வியாழக்கிழமையன்று நார்த் கரோலினாவுக்கு 200 மைல் தொலைவில் தவித்துக்கொண்டிருந்த லூயிஸ் ஜோடர்ன் என்ற 37 வயது நபரை அந்த வழியாகச் சென்ற ஜெர்மன் நாட்டு டேங்கர் கப்பல் ஒன்று பார்த்தது. அவர்...

கென்யாவின் வடகிழக்கே முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதியை பாதுகாப்புப் படைகள் சூழ்ந்துள்ளன. கரிஸ்ஸா என்ற ஊரிலுள்ள பல்கலைக்கழகத்திற்குள் எத்தனை பணயக் கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என பொலிசார் கூறுகின்றனர். நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர்...

All posts loaded
No more posts