Ad Widget

மலேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி

மலேசியாவின் போர்னியோ தீவிலுள்ள சபா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.0 ரிச்டர் அளவுகோலில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான கினபாலு மலையில் சுமார் 160 பேர் தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும் இவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts