Ad Widget

148பேருடன் பயணித்த விமானம் வீழ்ந்து நொருங்கியது

ஆறு விமான ஊழியர்கள் மற்றும் 142 பயணிகள் அடங்கலாக 148பேருடன் பயணித்த விமானம் தெற்கு பிரான்ஸில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பிரான்ஸின் ஐ டெலி செய்தி வெளியிட்டுள்ளது.

பார்ஸிலோனாவிலிருந்து டுசெல்டோர்ஃப்க்கு சென்ற லுஃப்தான்ஸா விமான சேவையின் இணை நிறுவனமான ஜேர்மன்விங்க்ஸ் விமான சேவையின் ஏ 320 ரக பயணிகள் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையிலேயே இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜேர்மனியின் டஸ்செல்டார்ப் நகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Posts