- Saturday
- June 7th, 2025

இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித உரிமைப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையர் செயித் ராத் அல் உசைன் அவ்வாறு தெரிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் நீண்ட உள்நாட்டுப் போரின் கடைசி மாதங்களில்...

நீதிக்கான தேடல் ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் கெலம் மக்ரே அறிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நோக்கில் நீதிக்கான தேடல் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்ற வழமையான மறுப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆவணப்படத்திற்கு அடிப்படையாக...

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று(திங்கட்கிழமை) தொடங்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில்...

முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலியாகினர். 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கொடூர விபத்து குறித்து அங்குள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், “மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

ஹங்கேரியில் குழந்தையுடன் ஓடிய சிரியா அகதியை கீழே தள்ளிய பெண் வீடியோகிராபரை செய்தி சேனல் பணிநீக்கம் செய்து உள்ளது. சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விட்டது. அவர்களில் பலரும் தங்கள் மீதியான வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக...

நார்வே நாட்டில் NuArt street art festival என்ற பெயரில் தெரு ஓவியக் கலைஞர்களுக்கான திருவிழா, கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களில் ப்ரெஞ்சுக் கலைஞர்களான எல்லா மற்றும் பிட் இருவரும் சேர்ந்து வரைந்த “Lilith and Olaf” என்ற ஓவியம்தான் பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. காரணம்,...

துருக்கி நாட்டு கடற்கரையில் இறந்து கிடந்த அகதி சிறுவன் அய்லானுக்கு பிரபல நடிகை உட்பட சமூக ஆர்வலர்கள் அய்லான் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து அஞ்சலி செலுத்தியுள்ளமை உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை கூடியுள்ளனர்....

கணணி வீடியோ கேம் ஐ தொடர்ந்து 22 நாட்களாக விளையாடிக் கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ருஸ்டம் (Rustam) திடீரென உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த 17 வயதுடைய ருஸ்டம் (Rustam) - கம்ப்யூட்டர் கேமில் மிகவும் ஆர்வம் மிக்கவன், வீட்டில் தனிமையில் இருந்ததால் அவருக்கு விருப்பமான 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' (Defence of...

கடலில் பலியாகி கரை ஒதுங்கி கிடந்த பிஞ்சுக் குழந்தை விவகாரத்தால் கனடா அரசு ஆட்டம் கண்டு உள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன்...

அயர்லாந்தை சேர்ந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்துள்ளன. நான்காவது சகோதரி கர்ப்பமாக இருப்பதுடன் அவருக்கும் விரைவில் குழுந்தை பிறக்கவுள்ளது. இம்முன்று சகோதரிகளுக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாயோ நகரிலுள்ள காஸ்ட்லேபர் பிரதேசத்தின் மாயோ பொது மருத்துவமனையில் குழந்தைகளை பெற்றுள்ளனர். குறித்த பிரதேசத்தில் அருகருகே வசித்த குறித்த சகோதரிகள்...

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான். தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள்....

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையுடன் இணைந்து...

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்டு ஸ்னோடன். ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள அவர் அண்மையில் மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். பஹாமாஸில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். ஒசாமா தற்போதும் அமெரிக்காவின் சிஐஏ ஊழியர்கள் பட்டியலில்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜரை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார். கராச்சி நகரில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற அதிவேக பந்துவீச்சு பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக கடந்த 5ம் திகதி கர்சாஸ் பகுதி வழியாக வசிம் அக்ரம் தனது காரை ஓட்டிச் சென்றார்....

ஆஸ்திரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லாரியொன்றிலிருந்து, குடியேறிகள் பலரது சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரிய நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேற்படி லாரியின் குளிரூட்டப்பட்ட பகுதிக்குள், 20 முதல் 50 வரையிலான சடலங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் குடியேறிகளை பாதுகாப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்குமான பொதுக்கொள்கையின்...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை கைளிப்பதற்காக விரைவில் கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நாவின் 30வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னர் அதனை இலங்கை ஜனாதிபதியிடம் கைளிப்பதற்காக அவர் வருகை...

ஜப்பானையும், பிலிப்பைன்ஸ் நாட்டையும் தாக்கிய புயலான "டைப்பூன் கோனி" புயலுக்கு ஜப்பானில் இதுவரையில் 13 பேரும், பிலிப்பைன்ஸில் 36 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புயலால் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரண்டு நாடுகளும் உருக்குலைந்து போயுள்ளது. கோனி புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் கடந்த சில...

வழமையாக புத்தகங்கள் மனிதர்களுக்கான அறிவூட்டல்களையே வழங்குகிறது. மனிதனும் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட அறிவுகளையே பெற்றுக் கொள்கிறான். ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புத்தகமானது நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்த உதவும் என தெரிவித்துள்ளனர். குடிக்கக்கூடிய புத்தகம் (‘Drinkable book’) என்ற பெயரிலான இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் வௌ்ளி, செப்பு மற்றும் நனோ துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. கழிவு...

இலண்டன் நகரில் 10 அடுக்குமாடி குடியிருப்புக்கள் இரண்டினை இணைக்கும் முகமாகவும், இரண்டு குடியிருப்புக்களிடையே பாலம் போல் செயற்படும் வகையிலும் 25 மீற்றர் நீளமுள்ள நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 25 மீற்றர் நீளமும் 3 மீற்றர் ஆழமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த நீச்சல் தடாகம் ஸ்கை பூல் "Sky Pool" என அழைக்கப்படுகிறது. அத்துடன்...

உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் முகநூல் நிறுவனரான மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம் பெற்றுள்ளார். உலக அளவில் 35 வயதுக்கு உள்பட்ட பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேஸ்புக் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம் பெற்றுள்ளார். "வெல்த்-எக்ஸ்" என்ற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 41.6 பில்லியன்...

All posts loaded
No more posts