Ad Widget

இஸ்ரேலிய படையினரால் பாலஸ்தீன மாணவி மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக்கொலை (படங்கள் இணைப்பு)

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் 18 வயது முஸ்லீம் மாணவி ஒருவர் எல்லையைக் கடக்க முற்பட்டுள்ளார்.

istrale-palasteena-girl-1

அவரை முதலில் துப்பாக்கியால் குறிவைத்த இஸ்ரேலிய ராணுவத்தினர் குறித்த மாணவியை சுட எத்தணித்துள்ளார்கள். அருகில் உள்ள ராணுவ வீரர் ஒருவர் சுடவேண்டாம் என்று சைகை காட்டுகிறார்.

istrale-palasteena-girl-2

மாணவியின் பாடசாலைப் பைக்குள் என்ன இருக்கிறது என்று அவர்கள் கேட்டவேளை , அதனை திறந்து காட்ட அவர் முற்பட்டுள்ளார். ஆனால் உடனே அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டார்கள் இஸ்ரேலிய ராணுவத்தினர்.

பின்னர் அவர் அருகில் ஒரு கத்தியை வைத்து விட்டு , மாணவி தங்களை கத்தியால் குத்த வந்தார். அதனால் தற்பாதுகாப்பிற்காக அவரை சுட்டுவிட்டோம் என்று கூறு கேஸை மூடிவிட்டார்கள்.

ஒரு பெண் அதுவும் 18 வயதுப் பெண் கையில் கத்தி வைத்திருந்தால் , அதனை மடக்கிப் பிடித்து பறிக்க பயிற்சி எதனையும் இந்த ராணுவத்தினர் எடுக்கவில்லையா ? இப்படி கையாயாலாக ராணுவம் ஏன் துப்பாக்கியோடு அலையவேண்டும் ? இவர்கள் வீரம் எங்கே போனது. ஒரு மாணவியிடம் தமது வீரத்தை காட்டி உள்ளார்களே என்று கூறி பாலஸ்தீன இளைஞர்கள் பலர் கொதித்து எழுந்துள்ளார்கள். அவர்கள் இஸ்ரேலிய கொடியை எரித்து பெரும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

istrale-palasteena-girl-3

istrale-palasteena-girl-4

istrale-palasteena-girl-5

Related Posts