ஐ.நா. அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றது ‘இனப்படுகொலை’ எனக் குறிப்பிடாதது ஏன்?

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றவை 'இனப்படுகொலை' எனக் குறிப்பிடாமல் 'அமைதி' காத்தமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விடயம் குறித்து இந்தியாவின் 'தி இந்து' நாளிதழ் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலிடம் கேள்வி எழுப்பியது. அந்தக் கேள்விக்கு ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா சம்தாசினி அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்...

சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல் ஜெனீவாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பேரணி

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, ஜெனீவா நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதற்கிடையே, அமெரிக்க வரைவு தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் விவாதம் தொடங்கியது. இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட போரின்...
Ad Widget

இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது. இலங்கையில் 2009–ம் ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்டப்போரில் ராணுவத்தால் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய மனித...

சர்வதேச பங்களிப்புடன் உள்நாட்டு விசாரணை! – நிஷா பிஸ்வால்

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிக்கும் வலுவான நோக்கத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ள, மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பதிலளிக்க சர்வதேச சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் கூடிய நம்பிக்கையான உள்நாட்டு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் மிகவும்...

இலங்கையின் நீதிக்கான தேடல்: மக்ரேயின் ஆவணப்படத்தால் கண்ணீர்க்குளமானது ஐ.நா. சபை!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணப்படம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30ஆவது கூட்டத் தொடர் நடைபெறும் கட்டடத்தில் இந்த ஆவணப்படம் நேற்றுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிக்கான தேடல் என்ற சனல் 4இன் கெலும் மக்ரேயின் ஆவணப்படமே...

இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து ஜெனிவாவில் ஆராய்வு! – எக்னெலிகொடவின் மனைவியும் பங்கேற்பு

இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சார்பாக இடம்பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டு காணாமல்போனோர் விவகாரம் தொடர்பாக Forum Asia, Franisans Intenational ஆகிய அமைப்புகள் நடத்திய சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து...

துருக்கியில் மேலும் ஒரு குழந்தையின் உடல் கரை ஒதுங்கியது

சிரியாவை சேர்ந்த நான்கு வயது சிறுமியின் உடல் ஒன்று ஏஜியன் கடற்கரை ஓரமாக கரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகளை ஏற்றிக்கொண்டு, கிரேக்கத் தீவு ஒன்றை நோக்கிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியிருப்பதாக துருக்கிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. பல குழந்தைகள் உட்பட 14 சிரிய நாட்டவர் காப்பாற்றப்பட்டுள்னர். இரண்டு வாரங்களுக்கு...

சர்வதேச விசாரணையை வலியுறுத்த அனைவரும் அணிதிரளுங்கள் – சத்தியராஜ் அழைப்பு

செம்டம்பர் 21ம் திகதி ஜெனீவாவில் முருகதாசன் திடலில் ஒரு மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. அப்பேரணியில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு உங்களில் ஒருவனாக வேண்டிக்கொள்கிறேன். தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை சர்வதேசத்திற்கு உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் பேரணி. இப்பொழுது அமொிக்கா பின்வாக்கியுள்ளது. இது விரும்பத்தகாதவொன்று. இது வருந்தத்தக்கவொன்று. எனினும் ஐ.நா தலையிட்டு இந்த விசாரணையை...

சர்வதேச நீதிபதிகள் மூலமே போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்! – கலம் மக்ரே

எத்தகைய விசாரணைகளை விரும்புகின்றீர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேட்பது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுளள்ள அவர்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வரவேற்கிறேன். ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் உறுதியாகியுள்ளன....

ஐ.நா அறிக்கை தொடர்பில் இலங்கையின் செயற்பாடுகளுக்கு பான் கீ மூன் பாராட்டு

இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனான மோதலின்போது இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்த விவகாரத்தை ஆராய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள், நிலைமைகளை முன்னேற்றுவதற்கு உதவும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித...

‘ரத்த சிவப்பு’ நிலா : வரும் 28-ம் தேதி உலகம் அழிந்துவிடுமா?

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சிலர் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா விண்கற்கள் பூமி மீது விழும் என நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர் அழிவின்போது தேவைப்படும் என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய...

மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என...

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவரை சந்திக்க விரும்பும் பேஸ்புக் நிறுவனர்

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பள்ளி மாணவர் அகமது முகமது ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரை சந்திக்க விரும்புவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், கூறியுள்ளார். பேஸ்புக்கில் அவர் இட்டுள்ள பதிவில் “ புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வமும், கனவும், லட்சியமும் கொண்டவர்கள் பாராட்டப்பட வேண்டும் மாறாக கைது செய்யப்படக்...

இலங்கையில் நீதியைத் தேடி : ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்த உடல்கள்… கதறிய நெஞ்சங்கள்…

கொத்து கொத்தாய் குண்டுகள் வீசி கொல்லப்பட்ட தமிழர்கள்... குழந்தைகளும், பெண்களும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து மடிந்ததை காண்பவர்களின் கண்களில் மட்டுமல்ல நெஞ்சங்களிலும் ரத்தத்தை வரவழைக்கும் ஆவணபபடம்தான் 'இலங்கை - நீதியைத் தேடி'. இலங்கை இறுதிப்போரில் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறது "இலங்கை-நீதியைத் தேடி" என்ற ஆவணப்படம். போர் இறுதிக்காலங்களில்...

போதையை கைவிடுங்கள் கணவனின் பிணத்துடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட பெண்

போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப்...

சிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது

சிலி நாட்டின் வடக்கு கடலோரப்பகுதியான இலாபெல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 8.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவியலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது, கட்டிடங்கள் ஊசலாடியது போன்று குலுங்கின. இரவு நேரம் என்பதால், செய்வதறியாது...

போர்க்குற்றம் குறித்து உள் நாட்டு விசாரணை உகந்தது அல்ல ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த் 14 ந்தேதி தொடங்கியது.ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வருகிற 16-ம் தேதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயித் அல்...

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் பின்வாங்கும் அமெரிக்கா!- கெலம் மக்ரே பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குநர் கலம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த கலம் மக்ரே, அமெரிக்க மற்றும் இலங்கை அரசை பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால் அமெரிக்கா பின்வாங்குகிறது.சீனாவுக்கு ராஜபக்ச...

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி ஏற்றார்

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக டோனி அப்பாட் கடந்த 2 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவர் பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்ற தவறி விட்டதாக மூத்த மந்திரி டர்ன்புல் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஆளும் தாராளவாத கட்சிக்குள் நடந்த ஓட்டெடுப்பில் டர்ன்புல் வெற்றி பெற்றார். டோனி அப்பாட் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் பதவி...

கிரீசுக்கு படகில் சென்றபோது விபத்து: 4குழந்தைகள் உட்பட 22 அகதிகள் பரிதாபமாக பலி

உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.சிரியாவில் இருந்து செல்கிற அகதிகள், துருக்கி வழியாக கிரீஸ் நாட்டின் கொஸ் தீவுக்கு செல்கின்றனர். இப்படிஒரு படகு 200-க்கும் மேற்பட்ட அகதிகளை சுமந்து கொண்டு துருக்கியில் இருந்து கடல் மார்க்கமாக ஒரு மரப்படகில் கொஸ்...
Loading posts...

All posts loaded

No more posts