Ad Widget

தாயின் பேஸ்புக் மோகத்தால் 2வயது குழந்தை பலி

தனது குழந்தையை கவனிக்காமல் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது குழந்தையயை பறிகொடுத்துள்ளார்.

facebook-baby-mother

பிரித்தானியாவின் Yorkshire பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாய் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குழந்தை வீட்டின் அருகாமையில் உள்ள நீர்நிலை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது.

இதையறியாத தாய் பின்னர் திடீரென தனது குழந்தையை காணவில்லை என அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார்.

எனினும் குழந்தை நீரில் மூழ்கி மயக்க நிலையிலேயே அவரால் குழந்தையை திரும்ப காணக்கிடைத்தது.

உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதும் குழந்தை மருத்துவமனையில் பரிதாபமாக இறந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், குழந்தை குளத்தினருகே விளையாடும்போது அவர் தாய் பேஸ்புக்கில் கவனம் செலுத்தி இருந்ததை உறுதி செய்தனர்.

இந்நிலையில் குழந்தை மீது போதிய கவனம் செலுத்தாமல் உயிரிழக்க காரணமாக இருந்த தாய் மீது வழக்கு பதிந்த பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts