Ad Widget

ஆப்கானிஸ்தானில் நடந்த விமான தாக்குதலுக்கு ஒபாமா மன்னிப்பு கோரினார்

ஆப்கானிஸ்தானிலுள்ள குண்டூஸ் நகர மருத்துவமனையில் அமெரிக்க தலைமையிலான உதவிக் குழு கடந்த வாரம் நடத்திய விமான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மெடிசன் சான் ஃப்ராண்டியர்ஸ் தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts