- Sunday
- June 8th, 2025

பிரபல மாடல் அழகி அர்ஷி கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சாகித் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். நான் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டேன்! ஒருவருடன் உறவு கொள்ள நான் இந்திய மீடியாவிடம் அனுமதி பெற வேண்டுமோ? இது என் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை இது...

கடந்த சனிக்கிழமை எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற ரஷ்யன் ஏர்லைன்ஸ் விமானம் ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் 224 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த இயக்கத்தினர் மக்களை அச்சுறுத்துவதற்காக கட்டுக் கதைகளை வெளியிடுவதாக ரஷ்யா தெரிவித்தது. இந்நிலையில் அந்த இயக்கத்தினர் தாங்கள்...

212 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறியுள்ளது. ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தில் ரஷிய சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்தாக கூறப்படுகிறது. எகிப்து எல்லையை கடந்து ரஷ்ய நோக்கி சென்ற போது சினை பெனிசுலாவில் சார்கோ...

வெளிச்சத் திருவிழா என்றுக் கூறப்படும் " ஹாலோவியன்" அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அமெரிக்காவின் தீபாவளி ஆகும். இறந்த பிறகு சொர்க்கத்துக்கும் போகாமல், நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் இந்த "ஹாலோவியன்". இதுபோன்ற கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான...

அவுஸ்திரேலிய நகர் ஒன்றில் இலங்கைப் பெண் ஒருவர் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பிறந்த குறித்த பெண் யுத்தம் காரணமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா ரட்னம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார். தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து சமந்தா...

போரின் கடைசிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ம் திகதி நடந்த “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நோர்வேயின்...

பின்லேடன் கொலையில் ஒபாமாவுக்கு சட்ட வழிமுறைகள் வகுத்து தந்தது 4 வக்கீல்கள்தான் என்பது உள்ளிட்ட இரகசிய தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் மீதும், நியூயோர்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி விமானங்களை மோதி அல்கொய்தா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி 3,000 பேரை...

2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் கிரீடம் சூடிய இளம் பெண் குறித்து இந்நாட்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Miss Uncensored எனும் பெயரில் தாய்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர், தாய்லாந்தின் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்த மின்ற் கனிஸ்டா என்பவராவார். இவரது தாய், பாதையிலுள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் தொழிலில்...

தாய்லாந்து, போத்ரம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று, பள்ளமொன்றில் தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 இலங்கை சுற்றுலாப்பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக பித்யாதேவி பண்டாரி (Bidhya Devi Bhandari) தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் ஏற்படுத்தப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் புதிய அதிபராக 54 வயதுடைய பித்யா தேவி பண்டாரி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் (United Marxist Leninist) துணைத் தலைவரான இவர் 327 வாக்குகள்...

வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம் குண்டினால் காயமடைந்த சிறுமி உடைகளை கழற்றியெறிந்து கதறியபடி ஓடி வந்த காட்சி அனைவரது மனதையும் பதைபதைக்கச் செய்தது. உலகில் நீண்ட நாட்கள் நடைபெற்ற வியட்நாம் போரில் 1955-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு...

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்தது. இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் மதியம் இந்துகுஷ் மலைப்பகுதியில் பூமிக்கு கீழே 190 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் கடுமையாக...

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுவகைகளை உண்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகின்ற உலக சுகாதார நிறுவனம், சிவப்பு இறைச்சி வகைகளை உண்பது அந்த ஆபத்தை அதிகரிக்கும் என்று முடிவு செய்துள்ளது. தினமும் 50 கிராம் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது குடல் புற்றுநோய் ஆபத்தை 18 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதியிலுள்ள ஹிந்து குஷ் மலைப் பகுதியிலுள்ள ஃபைசாபாத்துக்கு 80 கிலோ மீட்டருக்கு அப்பால் 7.7 அளவு சக்திகொண்ட இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்துக்கு உணரப்பட்டது....

படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 40 அகதிகளின் சடலங்கள் லிபியா நாட்டு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. எனவே, அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில் செல்கின்றனர். அவ்வாறு அளவுக்கு...

அமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்த பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி, வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு சலவை நிலையத்தில் சுறுசுறுப்புடன் வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் பதினோறு மணிநேரம் உழைக்கும் பெலிமினா காலையில் எழுந்து, வெளியில் வந்து மக்களிடம் பேசுவது ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்கின்றது. ஆகவே, இந்தப் பணியை...

இலங்கை தொலைக்காட்சிகளில் சனல்-4 ஊடகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென ஊடகவியலாளர் கலெம் மக்ரே கோரியுள்ளார். கூடிய விரைவில் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்துமாறு கோரியுள்ளார். ஆவணப்படம் தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மட்டுமன்றி...

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் புதிய பிரதி மேயராக தொழில் கட்சியை சேர்ந்த கம்ஸாஜினி குணரட்னம் என்ற இலங்கைப் பெண் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக கென்சவேட்டிவ் கட்சி வசமிருந்த ஒஸ்லோ நகரின் அதிகாரத்தை நோர்வோயின் தொழில் கட்சியும் அதன் கூட்டணியிலுள்ள பசுமை மற்றும் சோசலிச கட்சிகள் மீள கைப்பற்றியிருந்தன இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கம்ஸாஜினி குணரட்னம்,...

சீனாவின் ஜியாங்க்சி நகரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், வானில் மிதக்கும் நகரத்தை பார்த்துள்ளனர். கடந்த 13-ம் தேதி மேகமூட்டமாக இருந்த வானில், உயர்ந்த கட்டிடங்களை கொண்ட ஒரு மிதக்கும் நகரத்தை மக்கள் பார்த்து ஆச்சிரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். மிதக்கும் நகரத்தை பார்த்த ஒருவர் தனது செல்போனில் அதை படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை...

இஸ்ரேலில் உள்ள பேஸ்புக் தலைமையகம்மீது யூத ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி சேதமாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களால் பலஸ்தீனில் மேற்கொள்ளப்படும் அட்டூலியங்கள் குறித்த கருத்துக்கள் அடங்கிய பேஸ்புக் பக்கங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் குறித்த பக்கங்கள் பேஸ்புக் இணையதளத்திலிருந்து அகற்றப்படாததைக் கண்டித்து இஸ்ரேலில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போதே குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள்...

All posts loaded
No more posts