Ad Widget

ஆப்கான், பாகிஸ்தானில் நிலஅதிர்வு

வடக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் சில பகுதிகள், வட இந்தியாவில் தில்லி உள்ளிட்ட இடங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று அதிலை 2.16 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி இருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் அச்சத்தில் வெளியே ஓடிவந்துள்ளனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித காயங்களோ, உயிர்சேதங்களோ ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts