பான்கீமூனின் பிரதிநிதியிடம் மகஜர் கையளிப்பு

ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ முன் அவர்களது யாழ் வருயை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்பு போராட்டம் யாழ் பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது. பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும் ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பானீகீனின் பிரதிநிதி ஒருவர்...

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் பொதுமக்களிடம் வழங்கவேண்டும்: பான்கீ மூன்

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களின் காணிகளை விடுவித்தால் மாத்திரமே, மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியும் எனவும் ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக அமைப்புக்களுடைனான சந்திப்பில் உரையாற்றுகையில்...
Ad Widget

வடக்கு முதல்வரை சந்தித்தார் ஐ.நா.செயலர்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அவர்கள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்தார் பான் கீ மூன்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், இன்று மதியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை யாழ். பொது நூலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பான் கீ மூனின் வருகையை அடுத்து, அவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பெருமளவிலான மக்கள் யாழ். பொது நூலகத்தை சூழவுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில்...

பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழலில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ் நூலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை இன்று நண்பகல் 12.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடிய சுமார் பல நூற்றுக்கணக்கான காணாமல்போனவர்களின் உறவுகள் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில்...

வடக்கு ஆளுநருடன் பான் கீ மூன் சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் முத்தரப்பு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், முதலாவதாக யாழ். ஆளுநர் அலுவலகத்தில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்தார்....

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மூன்று மாதங்களில் பூர்த்திசெய்யப்படும்: ஜனாதிபதி உறுதி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ-மூனுடனான நேற்றை சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடக பிராதானிகளுடனான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில்...

வடக்கு மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பாகக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுடன் இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016) கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, திட்ட முகாமையாளர் நா.புகேந்திரன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட முகாமைத்துவ...

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹக் செய்த இருவருக்கு பிணை

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹக் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தியபோது பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, இந்த உத்தரவை பிறப்பித்தார். 27 வயது இளைஞன், 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான...

நயினாதீவு கடற்பரப்பில் கஞ்சா மீட்பு

நயினாதீவு கடற்பரப்பில் 10 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று வியாழக்கிழமை இரவு நயினாதீவு கடற்பரப்பு பகுதியில் இருந்த கஞ்சாவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கஞ்சாவினை கடற்பரப்பில் வைத்த சந்தேகநபர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றும், எவரையும் இதுவரை கைதுசெய்யவில்லை என்றும் பொலிஸார்...

விகாரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்குக் கடிதம்

வட மாகாணத்தில் உள்ள விகாரைகளில் தொடர்ந்து இடம்பெறும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விரைவாக தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என ஹெல பொது சவிய அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அமைப்பின் தலைவர் வண. புத்தகல ஜீனவங்ஸ தேரர், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடமாகாணத்தில் உள்ள விகாரைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு...

இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு சந்தித்துள்ளார். தேசிய நல்லிணக்க கொள்கையை வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் இன்று மு.ப 11.30 மணிக்கு ஆரம்பம்

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 2-09-2016 ஐ.நா செயலாளர் யாழ்வரும்போது நடைபெற ஏற்பாடாகியுள்ள போராட்டம் இன்று மு.ப 11.30 மணிக்கு யாழ் பொது நூலகம் முன்பாக ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட ஊடக அறிக்கையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம்

வைத்தியரை மோதிய சாரதிக்கு விளக்கமறியலில்

யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான தனியார் பேருந்தின் சாரதியை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார். கடந்த திங்கட் கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா செந்துருவன் (வயது-37) என்ற...

வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியில் வீடொன்றில் இருந்து 2 பிள்ளைகளின் தாயான 47 வயதுடைய சிறிஸ்கந்தராசா சந்திரபாரதி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் வட்டக்கச்சி மற்றும் கிளிநொச்சி பொலீஸார் பொலிஸார்...

முள்ளிவாய்க்கால் காணி சுவீகரிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முள்ளிவாய்க்காய் பகுதியில் கோட்டாபய கடற்படைத்தளம் அமைந்துள்ள காணியை சுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கூட்டம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் சிவனேசன், வடமாகாண பிரதி அவைத்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன்பின்னர் தென்னிலங்கை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர்,...

பரவிப்பாஞ்சான் மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில்

கிளிநொச்சியை அண்மித்த பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ முகாமிற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மக்கள் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னாள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த...

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ ஆலோசனைகள் இன்று ஆரம்பம்

புனர்வாழ்வு பெற்று சமூகத்தடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நலம் தொடர்பில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனைகள் மற்றும் சேவைகளை முன்னாள் போராளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையில் எடுக்கப்பட்ட...

சிங்கள மாணவர்களை 22இல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதல் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய 04 சிங்கள மாணவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் நீதி மன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ். நீதவான் தீதிமன்றத்தில் சிங்கள மாணவர்கள் நான்கு பேர் முன்னிலையாகிய போதே, எதிர்வரும் 22ஆம் திகதி மீளவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் சதீஸ்கரன் கோப்பாய் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்....
Loading posts...

All posts loaded

No more posts