- Saturday
- May 9th, 2026
புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்றுப் பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த அனுமதி தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் கொன்சியூலர் அலுவலகங்கள் இரண்டை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. வவுனியாவை விடவும் யாழ்ப்பாணம் சிறந்தது என்றும் இதன்போது அறிவிப்பு விடுக்கப்பட்டது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
'ஆவா' என்ற பெயரில் குழுவொன்றை அமைத்து, யாழ்ப்பாணத்தில் வன்முறையைத் துண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்காக தற்போது மொத்தம் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடக்கையும் அச்சுறுத்தும் 'ஆவா குறூப்' எனும் குழு வின் பின்னணியில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே உள்ளதாகவும் அவர்களது ஆலோசனைகளுக்கு அமைவாகவே அக்குழு செயற்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்...
ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (08/11/2016) கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர் தேசிய...
அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்த சாமி விக்கிரகங்கள் சில நாட்களில் காணமற்போயுள்ளன. மேலும் சுவாமி வாகனங்கள் , மணிகள் பெறுமதியான பொழிகற்கள் என்பனவையும் ஆலயத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர்...
யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இவரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் காங்கேசன்துறையில் வைத்து நேற்று பிற்பகல் வேளையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில் ஆவா குழுவுடன்...
வடபகுதி மக்களின் ஒற்றுமை சகல மக்களுக்கும் முன்மாதிரியாக அமையவேண்டுமென தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஒற்றுமையே தற்போது அவசியமான ஒன்றென சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கடைத்தொகுதியை, அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கிளி.வர்த்தகர்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கையளித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”யாவரதும் ஒத்துழைப்பே இன்றைய காலகட்டத்தில் வடமாகாணத்தின் தேவையாக...
கிளிநொச்சி பொதுச்சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாதம் 16ஆம் திகதி கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் 110 வர்த்தக நிலையங்கள் முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளன. இதனையடுத்து நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு தலா 20ஆயிரம் ரூபா...
இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் நடாத்திவரும் சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுத்துள்ள சிகையலங்கரிப்பாளர்கள் அதற்கு ஒரு மாதகால அவகாசமும் வழங்கியுள்ளனர். வவுனியா முத்தையா மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வடமாகாண சிகை அலங்கரிப்பாளர் சங்க பொதுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிகை அலங்கார சங்கத்தின் தலைவர் கே. நாகராசா தெரிவித்தார். இப்பொதுக்கூட்டத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள...
நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை நிதிக்குற்ற பிரிவிடம் ஒப்படைப்பதற்கு வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை நடாத்திய மாகாண சபை குழு சபையில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. வடமாகாணத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல்...
இலங்கையின் வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக 1.5 மில்லியன் பவுன் நிதியுதவியை பிரித்தானியா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் பரோனஸ் அனேலே இதனைக் கூறியுள்ளார்.
பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள கர்ப்பிணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. பிரவசத்தின் போது கர்ப்பிணிகள் தங்களது மனோதிடத்தை வலுப்படுத்திக்கொள்ள தமக்கு விருப்பான பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணத்துவ மருத்துவர் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற...
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு அவுஸ்திரேலியாவுக்கான விசா வழங்குவதனை இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிராகரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு ஆலாசனை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் இயங்கி வரும் ஆவா என்ற பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சிலரைக் கைது செய்திருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களின் உறவினர்கள் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான்...
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான காரைநகர் பேரூந்து தனியார் பேரூந்தை ஆலடி சைவமகாசபை அண்மித்த பகுதியில் மோதி தள்ளியுள்ளதுடன்.இருவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த இருவரும் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதர்க்கான நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருவதாகவும் அறிய முடிகின்றது. ஆலடி சைவமகாசபை அண்மித்த...
'யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்ற போதிலும், பொலிஸ் முறைபாடுகள் குறைவடைந்தமைக்கு சமூகக் கட்டுப்பாடுகளே காரணம்' என யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் பார்னஸ் ஆன்லேக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட மேற்படி இராஜாங்க அமைச்சர், திங்கட்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கு விஜயம்...
சிறப்புரிமை தொடர்பாக வட மாகாண சபையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளார். எனினும் சக உறுப்பினர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. வட மாகாண சபையின் 65ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரை குறித்து...
ஆவா குழு என்பது ஒரு மாயை!! கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவன் சட்டத்துறை மாணவன் : வி.மணிவண்ணன்
ஆவா குழு என்பது ஒரு மாயை. அந்த மாயை குழுவினைக் கொண்டு அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்து உள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,...
Loading posts...
All posts loaded
No more posts
