அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியழுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிகளுக்கு வடபகுதி மக்கள் முழுமையாக ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பிருமான இராமநாதன் அங்கஜன் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், கடந்த இரண்டு தேர்தல்களிலும் யாழ். மக்கள் ஜனாதிபதிக்கு வழங்கிய ஆதரவினை தொடர்ந்து வழங்குவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
அங்கு தொடர்ந்த உரையாற்றிய அவர், தற்பபோதைய ஜனாதிபதி இன, மத மொழி கடந்து அனைத்து மக்களது பிரச்சினைகள் குறி்த்தும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.