- Saturday
- May 9th, 2026
கல்விக்கு பெயர்போன யாழ்ப்பாணம் கடந்த மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக பலவற்றை இழந்துள்ளதென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு கல்வியில் தேர்ச்சி பெறுவதோடு, அபிவிருத்திகளையும் முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். யாழ்.வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களுக்கான வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) யாழ். இராமநாதன்...
யாழ்ப்பாணம் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஆணின் சடலம், வெள்ளிக்கிழமை (25) மாலை மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர் ரீ.பிரதீபன் தெரிவித்தார். மேற்படி நபர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த யாழ். தேவி ரயியில் பயணித்துள்ளதாகவும் களைப்பு காரணமாக ஓய்வெடுத்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையடிக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரதேச இளைஞர்களால் மடக்கிப்பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலை மாணவனை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்வதற்கு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் சனிக்கிழமை (26) அனுமதி வழங்கினார். மேலும் குறித்த சம்பவம் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் 02ஆமி திகதிக்கு...
180 மில்லிகிராம் குடு வைத்திருந்த குற்றச்சாட்டில் குடு பேபி என அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் வைத்தியசாலை வீதியில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் சனிக்கிழமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். யாழ். ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் கொள்ளையிடப்பட்ட துவிச்சக்கரவண்டியில் குடு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அவர்...
கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். 45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் கடந்த 16ம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான...
வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கில் பணியாற்றும் விவசாயப் போதனாசிரியர்களுக்குத் தமிழகத்தில் திறன் விருத்திப் பயிற்சி நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் இயங்கும் தேசிய வேளாண் நிறுவனத்தின் மூலம் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (25.11.2016) விவசாய அமைச்சின் அலுவலகத்திலும் திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திலும் இடம் பெற்றுள்ளது....
வடக்கில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கட்டுப்பாட்டிலுள்ள மாவீர்ர் துயிலும் இல்லங்களை விடுவிக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மாவீர்ர் துயிலும் இல்லங்களையே விடுவிக்குமாறு நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான காணி அமைச்சு தொடர்பான குழு நிலை...
தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் கைலாசபதி கலையரங்கின் நுழைவாயில் சிவப்பு, மஞ்சள் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைவர் பிரபாகரனின் படம் வைக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் கேக்கில் மேதகு பிரபாகரன் என எழுதப்பட்டு 62 ஆவது மெழுகு திரி கொழுத்தப்பட்டுள்ளது.
“ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மெய்ப் பாதுகாவலர்களாக இருந்த எம்மிடமும் துப்பாக்கிகள் இருந்தன. அதனை நாம் பயன்படுத்தியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். ஆனால், அதனை பாவிக்க வேண்டாம் என மாவை சேனாதிராஜா எம்மைத் தடுத்துவிட்டார்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல்...
2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய காலப்பகுதியில் ஊர்காவற்துறை நீதிமன்றில், பூர்வாங்க விசாரணையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் வழங்கிய சாட்சி மேல் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நேற்று (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது? குறித்த சம்பவம்...
யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார். ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாதமையால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும், திங்கட்கிழமை (28) காலை 8.30 மணியளவில் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயல்பட முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்...
உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இதனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார். கடந்த 21ஆம் திகதி முதல் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாளை மாவீரர் தின நினைவேந்தல்களை நடத்த எதிர்ப்பார்த்துள்ள நிலையில், அரச தரப்பில்...
இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் 40% வீதமானோர் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய சமூக நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு செயற்றிட்டத்தின் ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு வௌிநாடுகளில் தொழில் புரிந்துவிட்டு மீண்டும் நாடு திரும்புபவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளரும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கும், அரச சேவைத் துறைக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள இழப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலுமுள்ள சகல அரச வைத்தியசாலைகளினதும் முன்னாள் இந்த...
அரச ஊழியர்களின் பதவியுயர்வுக்கு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் சேவைக் காலத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வுகள், எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இப்பதவியுயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அரச சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத்...
நாம் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கும், இராணுவ அடக்குமுறைகளுக்குமே எதிரானவர்கள் என வடமாகண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான...
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் திணைக்கள வளாகத்தில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரை வீதியிலுள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று லட்சம் ரூபா பெறுமதியிலான மோட்டார் சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த நிலையில்...
கிளிநொச்சி முழங்காவிலில் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் நேற்றுமாலை நடைபெற்றுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ள அவர்களும் கலந்துகொண்ட இந்தத் துப்பரவுப் பணியில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்பரவும் செய்யும் பணிகள் நேற்று காலை கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை முழங்காவில் துயிலுமில்லத்தில் துப்பரவுப் பணிகள்...
தலவாக்கலையில் உள்ள பிரபல சிங்கள பாடசாலை ஒன்றின் மாணவனை இந்தெரியாத நபர்கள் தாக்கி அம் மாணவனின் கையில் 'தமிழ்' என ஆங்கில எழுத்துக்களால் பிளேட் ஒன்றினால் கீறியுள்ளனர். தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த தரம் பத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
