- Monday
- August 17th, 2026
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கூறினார். புனர்வாழ்வு பயிற்சி வெற்றிகரமாக அமைந்ததால் அவர்கள் மீண்டும் ஒருபோதும் மோதலுடன் தொடர்புபட மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். எதிர்வரும் இரண்டு...
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் தொடர்பில் நீடித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த பேராளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ.காதர் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றுவார் என்றும் தெரிவித்த ஹக்கீம் இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா...
நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்காவை சர்வதேச போர்த் தலமாக மாற்றிக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி, மீண்டும் ஆயுதங்களைக் கையில் ஏந்தும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றது. நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்ற புதிய அரசியலமைப்பை அவசர அவசரமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம்...
இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது இலங்கை. நாசோவில் நடைபெற்ற சிவில் விமானப் பேச்சுக்களில் இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உடன்பாட்டுக்கமைய, இந்தியாவின் ஆறு மெட்றோ விமானநிலையங்களுக்கு இலங்கையினால் கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ளமுடியும். சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய விமான நிலையங்களுக்கு கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ள...
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக சூழலில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. அதில் “இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் ஒழிக்கும் அரசின் முயற்சியை தோற்கடிப்போம்”, ” மாலேப திருட்டு கல்விக் கடையை காக்கும் மைத்திரி ரணில் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்” என என பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் மற்றும் திருகோணமலை எண்ணெக்குதம் போன்ற அரசாங்கச் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவிக்கையில், விலைமனுக்கோரலின்றி எந்தவிதக் கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறாது எனக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது....
பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார். யாழ்ப்பாணத்தில் தூசு, இறந்த நிலையிலுள்ள பூச்சிகள் கலந்த ஜெலிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே நேற்றயதினம் நீதவான் தண்டம் விதித்ததுடன் அந்த...
வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்களின் நிலக்கீழ் நீர் விரைவாக கல்சிய அதிகரிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் போரில் அழிந்தது போக மிகுதியாக ஊர் திரும்பியவர்களை சிறுநீரக நோய் அரிக்கின்றது. உதாரணத்திற்கு வவுனியா வடக்கில் இருக்கும் கற்குளம் கிராமத்தை எடுத்துக்கொள்வோம். நெடுங்கேணி பிரதேச சபைக்கு கீழ் உள்ள கிராமங்களில் கற்குளம் கிராமமும் ஒன்றாகும். தனி கிராம சேவகர் பிரிவாக...
குரும்பசிட்டி கிழக்கு, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார் என்று, அவரது பெற்றோரால், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறுமி, கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. மகேந்திரன் வினித்தா என்ற மேற்படி சிறுமி, கடந்த 12ஆம் திகதி மாலை வேளையில், வீட்டில் இருந்த போதே,...
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம்...
பொருத்து வீட்டுத்திட்டத்துக்குகு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடைய நிதிப்பங்களிப்புடன் நிரந்தர வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் 13,000...
இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 18 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர்.
நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெற உள்ளது. காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நாடு பூராகவும் 661 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவிக்கின்றது. தேர்தலுக்காக 916 இளைஞர் யுவதிகள் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதுடன், வாக்களிப்பதற்காக 340,000 வாக்காளர்கள்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி...
கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் சொகுசு பேருந்தொன்று இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சிவன் கோயிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தே இவ்வாறு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். எனினும்...
கச்சதீவு திருவிழாவில் அதிக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்குமாறு தமிழகத் தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழக அரசின் சார்பில் உத்தியோகபூர்வ கடிதம் எழுதியமையால் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். இந்திய மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் மற்றும் சசிகலா ஆகியோர் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் அதிக...
இலங்கையிலுள்ள 5000 ரூபா நாணயத் தாள்களை இந்தியாவைப் போன்று செல்லுபடியற்றதாக ஆக்கப் போவதாக தான் கூறவில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மறுத்துரைத்தார். நேற்று நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். கடந்த காலத்தில் காணப்பட்ட எதிர்க் கட்சியின் சில தவறான நிதி முன்னெடுப்புக்கள் பற்றியே நான் விளக்கமளிக்க...
வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வவுனியா அடப்பன்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரத போராட்டம், நேற்று (வியாழக்கிழமை) இரவுடன் கைவிடப்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தொடர்புகொண்டு தாம் வீடுகளை பெற்றுத்தருவதாக வழங்;கிய வாக்குறுதியினை அடுத்தே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது....
முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்குவதற்கான அடித்தளங்கள் இடப்பட்டு வருகின்றன. மக்களிருக்கும் நிலங்களை...
பொது மக்களுக்குச் சொந்தமான ஓமந்தை சோதனைச் சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். குறித்த காணிக்கு மாற்றீடாக வேறு 6 ஏக்கர் காணியை இராணுவத்தினருக்கு வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஓமந்தைச்...
Loading posts...
All posts loaded
No more posts
