Ad Widget

முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் தொடர்பில் நீடித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த பேராளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ.காதர் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றுவார் என்றும் தெரிவித்த ஹக்கீம் இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி புதிய செயலாளர் நியமனத்திற்கு ஆட்சேபனைத் தெரிவித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறையிட்டதை அடுத்து சர்ச்சை எழுந்திருந்தது. எனினும் நேற்றய தினம் ஹசன் அலி தனது முறைப்பாட்டை வாபஸ்பெற்றுக்கொண்டதை அடுத்து சிக்கல் சுசூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டியில் வைத்து தெரிவித்தார்.

Related Posts