இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 18 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.
1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர்.