யாழ் வந்த புகையிரதத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதமொன்றில் மிதி பாலகையில் பயணித்த இளைஞர்கள் சிலர் பகிரங்கமாக சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.புகையிரதத்தில் பயணிக்கும் இவர்கள் கஞ்சாவினை பயன்படுத்தியுள்ளனர்.மேலும் புகையிரதம் நிறுத்தப்படும் இடங்களில் வெளியில் செல்லும் பெண்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர்.இதன்போது இவர்களது இந்த செயலை தனியார் தொலைக்காட்சி செய்திப் பிரிவு ஒன்று...

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக அரசினால் ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45% செலவிடப்பட்டுள்ளது!

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு 7,724 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன்...
Ad Widget

விபத்தில் உயிரிழந்த மாணவி உயர்தரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம்!

2016ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ தரச் சித்தியெத்தி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவி சிவதுர்க்கா அண்மையில் மாகோ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியாகியவராவார். வவுனியா இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சிவதுர்க்கா சிறந்த பெறுபேற்றை பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று...

கிணற்றை காணவில்லை என முறைப்பாடு

வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா நகரசபையினால் பொதுமக்கள் பாவனைக்காக வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி...

இளவாலையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் கைது

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள்...

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...

கனடா மார்க்கம் நகர சபையுடன் வடமாகாணம் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை

வடமாகாண சபையும் கனடாவின் மார்க்கம் நகர சபையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளன. இவ் ஒப்பந்தமானது எதிர்வரும் 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று கைச்சாத்திடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கனடா விஜயம் செய்துள்ளனர். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

சமஸ்டி, வட,கிழக்கு இணைப்பு இன்றிய தீர்வை ஏற்க வேண்டாம்!! சம்பந்தனிடம் வலியுறுத்து

சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களைத் தவிர வேறு தீர்வுகளை அரசாங்கம் முன்வைத்தால் அதனை நிராகரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், கூட்டமைப்பின் தலைவரிடம் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன. அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....

மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரகங்கள் தானம்!

யாழில் மூளைச்சாவடைந்த நபர் ஒருவருடைய சிறுநீரகங்களை இன்னொரு நபருக்குப் பொருத்துவதற்காக, கொழும்பில் இருந்து வருகை தந்த உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் குழுவினரால் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்திய சாலையில் இருந்து உடல் உறுப்புக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் றுவான் திஸ்ஸநாயக்க தலைமையில் வைத்தியர் பிரசாட்...

யாழில் காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரிப்பு!

நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் காரணம் கண்டறியமுடியாத சிறுநீரக நோய் பரவி வருவதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் குறித்த சில இடங்களில் இந்நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் அச்செயலணி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறுநீரக...

யாழ். பல்கலையில் 2151 பேருக்குப் பட்டம்!

யாழ்பாண பல்கலைக்கழகத்தின் இவ்வருட பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் முற்பகல் 9.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயெ மேற்கண்டவாறு தெரிவித்தார் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஐனவரி 10, 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது....

கட்டைக்காடு கடைசி பஸ் சேவை நேரத்தில் மாற்றம்

பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காட்டுக்கு செல்லும் இறுதி பஸ் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைசாலையின் முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்தார். பின்தங்கிய கிராமமான கட்டைக்காடு கிராமத்துக்கு இதுவரை இறுதி பஸ் மாலை 4 மணிக்கு புறப்பட்டது. இதனால், அக்கிராமத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இதனையடுத்து, பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காட்டுக்கு செல்லும் இறுதி பஸ் மாலை 6 மணிக்கு நேற்று...

காணியற்ற குடும்பங்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கை

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், தாம் பெற்றுக்கொள்ள விரும்பும் அரச காணிகளை அடையாளம் காட்டுமிடத்து, அவற்றைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில், பரிசீலனை செய்யப்படும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பதவியேற்று 2வருடம் பூர்த்தியை முன்னிட்டு மரநடுகை

நெல்லியடி பொலிஸார் மற்றும் நெல்லியடி பிரதேச சபை என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, மரநடுகை நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி, வதிரி - உல்லியனொல்லை கண்ணகை அம்பான் ஆலய வீதியில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதியுடன், ஜனாதிபதி பதவியேற்று 2 வருடம் பூர்த்தியடைவதை முன்னிட்டு இம்மரம் நடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 16ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, அவர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி...

அரிசிக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு

இறக்குமதி செய்யும், ஒரு கிலோகிராம் அரிசிக்காக இதுவரையிலும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தீர்வையான 80 ரூபாய், நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 15 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

2016 ஆம் வருட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் இணைய முகவரியில் பார்வையிட முடியும். இதேவேளை, அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களும் கையடக்க தொலைபேசி மூலம் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். exam இடைவெளி intex number 7777 என்ற...

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தவர்களுக்கு பிணை

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட...

எழுக தமிழுக்கு அணிதிரளுமாறு அறைகூவல்!

வடக்குக் கிழக்கு மக்களின் அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்திக் கூற எதிர்வரும் 21ஆம் நாள் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வசந்தராசா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக...

சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று கூடுகிறது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 இற்கு நடைபெறவுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளக விசாரணை பொறிமுறை போன்றன குறித்து அண்மைய நாட்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு...
Loading posts...

All posts loaded

No more posts