முல்லைத்தீவில் வரலாற்றுச்சின்னங்கள் அழிந்து போகும்நிலையில்!

ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில்...

திருகோணமலை மாவட்டத்திலுள்ள புத்தர் சிலைகளை பாதுகாக்க விசேட நடவடிக்கை

திருகோணமலைப் பிரதேசத்திலுள்ள புத்தர் சிலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பிரணாந்துவின் தåலைமையில் நேற்று (08) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் அப்பிரதேசத்திலுள்ள விகாரைகளின் பிக்குகளும் கலந்துகொண்டுள்ளனர். திட்டமிட்ட குழுவொன்றினால், திருகோணமலை மாவட்டத்தின் 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர்...
Ad Widget

தமிழ் பேசும் மக்களுக்கு புதிய தொலைக்காட்சி அலைவரிசை

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் 25 வீத தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலைவரிசை ”நல்லிணக்க அலைவரிசை” என்ற பெயரில் தனது சேவையை வழங்கவுள்ளது. இந்த அலைவரிசைக்காக நல்லிணக்க அமைச்சர்...

எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழப்பு

கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாகவும் வருட இறுதிவரை எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில் எச் .ஐ. வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளதாக...

ஆட்சியை கவிழ்க்க எவராலும் முடியாது, புதிய அரசும் தேவையில்லை ; ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் – சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆட்சியை விட்டோடிய மகிந்த நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை விமர்சிப்பது வேடிக்கையான செயலாகும் எனவும் வெட்டிப்பேச்சுக்களுக்கு அரசாங்கம் அச்சமடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது....

பற்றுச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு அபராதம் அதிகரிப்பு

பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், தனியார் பஸ்களில் தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு, அபராதத் தொகையொன்றை விதிக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு, பற்றுச்சீட்டின்றிப் பயணிக்கும் பயணியொருவருக்கு, ஆயிரம் ரூபாய் மற்றும் பற்றுச்சீட்டுக் கட்டணத்தின் இருமடங்கையும் செலுத்தக்கூடிய வகையில், இந்த அபராதம் விதிக்கப்படும் என்றும் அவ்வாணைக்குழு தெரிவித்தது. அதற்கு ஏற்றவகையிலான சட்டத்திருத்தங்களை, தற்போது தயாரித்து...

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 285 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் இரண்டாம் ஆண்டு பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், நாடளாவிய ரீதியில் 285 கைதிகள், நேற்று காலை,விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் யாழ் சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் நேற்று காலை யாழ் சிறைச்சாலை...

தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது!

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே...

80 மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

இம்முறை கஸ்டப் பிரதேசங்களில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார். கோட்டா முறையில் கஸ்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதி வழங்கப்படுகின்றது. இந்தநிலையில் இந்த சிறப்புச் சலுகையைப்...

ஜனாதிபதி பதவியேற்று இன்றுடன் இரண்டு வருடம் நிறைவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (08) இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமய நிகழ்ச்சிகள் மற்றும் இன்று மாலை பி.எம்.ஐ.சி.எச். இல் ஜனாதிபதியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறவுள்ளன. இதில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 2043பேர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பம்!

யாழ் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 43 பேர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பத்துள்ளார்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், பொருத்துவீட்டை பெற்றுக்கொள்ளவிட்டால் கல் வீடு வழங்கப்படாது என பொதுமக்களிடம் பரப்பப்படும் கருத்துக்கள் தவறானவை எனவும் தெரிவித்துள்ளார். மீள் குடியேற்ற அமைச்சினால் வடக்கில் பொருத்து வீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த பொருத்துவீட்டு திட்டத்தில்...

சட்டமா அதிபர்மீது குற்றம் சுமத்தியுள்ளது குற்றப் புலனாய்வுப் பிரிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய முக்கிய இரு குற்றவாளிகளைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் அனுமதி மறுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற இந்தப் படுகொலையின் இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் கைது செய்து,...

வாள்வெட்டு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினால் வாள் வெட்டு குழுச் சேரந்த சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

உ/த மீள் திருத்தத்துக்கான இறுதி திகதி அறிவிப்பு

வெளியான, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தாரிகள் தங்களுடைய விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியு. எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்தார். பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பங்கள்...

119க்கு அழைப்பை ஏற்படுத்தலாம்

எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமையன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 6 மணிவரையிலான 2 மணிநேரத்துக்கு, 119 தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்த வேண்டாமென பொலிஸ் தலைமை அலுவலகம் கடந்த 5ஆம் திகதியன்று அறிவித்திருந்தது. பொலிஸ் அவசர மத்திய நிலையத்தின் குறுகிய இலக்கமான 119 தொலைபேசி வலையமைப்பில் அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் அவ்வலையமைப்பில்...

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு பிரகடனம்

முல்லைத்தீவு மாவட்டத்தை வரட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாகப் பிரகடனப்படுத்தி, வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன் தெரிவித்தார். மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம், இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஆணையாளர் இவ்வாறு...

யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் கைது

கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர்கள் நடத்திய தேடுதலின் போது இரு இளைஞர்கள் நுகர்விற்காக கஞ்சா கலந்த மாவாவை கொள்வனவு செய்த போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 84 கிராம் கஞ்சா கலந்த மாவாவை...

இந்திய மீனவர்கள் 06 பேர் கைது

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 06 பேர் இன்று (08) இலங்கை கடற்படையினால் யாழ்ப்பாண நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் 06 பேர்களும் யாழ்ப்பாண நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஒரு ட்ரோலர் படகுடன் ஏனைய மீன்பிடி உபகரணங்களுடன் அவர்கள் கைதானதாக கடற்படையினர்...

முன்னாள் போராளிகளுக்கான கடன் திட்டங்களை நிறுத்தியது கண்டிக்கத்தக்கது!

இன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது முகநூல் (Facebook) பக்கத்தில் மக்களால் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதன்படி, யுத்த முடிவுக்கு பின்னர் வடக்கில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன, முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட தொழில் கடன்களும் நிறுத்தப்பட்டுவிட்டன, இவற்றை கருத்தில் கொண்டு பொது எதிரணியாக இப் பிரச்சினைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கைகளை வருங்காலத்தில்...

அம்பாந்தோட்டையில் சீனா 5 பில்லியன் டொலர் முதலீடு

அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு...
Loading posts...

All posts loaded

No more posts