- Monday
- May 11th, 2026
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். இதற்கு முன்னரும் விமலிடம் பலமுறை விசாரணை...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் சிங்கள மொழி பேசும் ஜுரிகைள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேன்முறையீடு செய்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இந்த மேன்முறையீட்டு மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்தார்.
பருத்தித்துறை சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக காவல்துறையினர் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும். இதன்போது யாழ். பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை...
நல்லாட்சி அரசாங்கத்துடன், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துகொள்ளப் போவதாக வெளியான செய்தி தொடர்பில், அவ்விரு கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், “அமைச்சுப் பதவியொன்றை ஏற்பதையோ அல்லது நல்லாட்சி...
வலிகாமம் வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்காது ஒரேயடியாக முழுமையாக விடுவிக்கவேண்டுமென வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழு அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.சஜீவன் கருத்துதெரிவிக்கையில்- வலிகாமம் வடக்குப் பகுதியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றது. கடந்த 4 ஆம் திகதி யாழ்.விஜயத்தின் போது வலி.வடக்கின் ஒரு பகுதி விடுவிக்கப்படும்...
வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்தினமான எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரனி செயலாளர் இ.இராவீந்திரன் தெரிவித்தார். நாளை மறுதினம் 12 ஆம் திகதி விடுமுறை நாளாக உள்ளது. எதிர்வரும் 14 ஆம்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டு வருவது குறித்து தேர்தல்கள் ஆணையகம் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட...
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 12பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதனை நேற்று மகிந்த ராஜபக்ஷ நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியப்படுத்தினார். தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பில் 12பேர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த சம்பவமானது அம்பாந்தோட்டை சம்பவத்தின் பின்னர் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று நாடாளுமன்ற அமர்வு முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றில், மாவை சேனாதிராசா கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து...
திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றி அமெரிக்க கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு முக்கிய நகரங்களைக்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்வியங்காடு விளையாட்டு மைத்தானத்தில் வைத்து இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் சென்றுள்ளார். இதன் போது மோட்டர் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த...
வேலணை மேற்கு சங்கத்தார் கேணிக்குளத்தில் நண்பிகளுடன் குளிக்க சென்ற யுவதி, நீரில் மூழ்கி நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த சுரேஸ் வினோஜா (வயது 16) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கியவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். குளித்துக்கொண்டிருந்த போது யுவதி,...
துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில நேர்த்திக் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் நபரொருவர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று தெரிவித்தார். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து 275கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேகநபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்...
அரச உயர் அதிகாரிகள், ஐரோப்பிய முறையிலான ஆடைகளை அணிவது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சுற்றுநிருபத்தை தான் இல்லாது செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அரச சேவையின் உயர் அதிகாரிகள், இனிமேல் அத்தியாவசிய தேவைகளை விடுத்து, ஏனைய சந்தர்ப்பங்களில் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டியதில்லை...
இடமாற்றக் கொள்கை நிறைவேற்றப்பட்ட பின்னரே இடமாற்ற விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்வோம் என வடமாகாண பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று (9) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இந்த அறிவித்தை விடுத்துள்ளனர். வடமாகாண சுகாதார அமைச்சு தமது பணிப்புறக்கணிப்பின்...
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய பாத யாத்திரிகர்கள் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். குறித்த யாத்திரிகர்கள் டிசம்பர் மாதம் 17ம் திகதி மதுரையிலிருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தனர். மாத்தறை விஷ்ணு ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த யாத்திரை நேற்றைய தினம் காங்கேசன்துறையில் நிறைவடைந்தது. உலக சமாதானத்தையும், இனங்களுக்குகிடையிலான நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் 87 நாட்களை கொண்ட குறித்த...
வவுனியா நகரின் பிரதான வீதியிலிருந்த குளாய்க்கிணறு இன்று வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர். தயாபரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே காணப்பட்ட பொதுக் கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சம்பவ இடத்திற்குச் சென்று நகர சபையின்...
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த கலந்துரையாடலை விரைவில் அம்பாறையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்து ஆராய்வதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்காவில் அனைத்து மக்களின் மகிழ்ச்சிக்கும் நன்மைக்குமான தனது சமாதானம் மற்றும் நல்லிணக்க எண்ணக் கருக்களை இதன்போது சம்பந்தன் பகிர்ந்துகொண்டதாக அமெரிக்கத் தூதுவர்...
கடந்த 2015 ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 2305 மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களின் அனுமதிக்காக இதுவரை 1118 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
