- Monday
- May 11th, 2026
இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முழுவதிலும் நிலவும் வறட்சியான காலநிலையால், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக, தொடர்ந்து நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி முக்கியமான தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் பனைவிதைகளை நடுகை செய்து பராமரிக்கும் கற்பக கானகத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று வியாழக்கிழமை (12.01.2017) நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வைத்துள்ளார். கனடாவில் உள்ள நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் 2013ஆம் ஆண்டில் இருந்து நெடுந்தீவில் பாடசாலை மாணவர்கள் மூலம்...
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கையில் நிகழும் ஆக்கபூர்வமான நிலைமாற்றத்தை கௌரவிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணைக்குழு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜேர்மனியிற்கு உத்தியோகபூர்வ...
உணவுக் கழிவுகளை ஏற்றிவந்து திருட்டுத் தனமாக காக்கைதீவுப் பகுதியில் கொட்ட முயன்ற யாழ் நகரின் மத்தியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் உழவு இயந்திரம் மாநகர காவல் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ் நகரின் புறநகர்ப் புறத்தில் உள்ள ஒரு பிரபல விடுதியின் உணவுக் கழிவுகள் இறைச்சிக் கழிவுகளை உழவு இயந்திரத்தில் ஏற்றி காக்கைதீவில் கொட்ட முயன்றவேளையில்...
உள்நாட்டு அரிசியின் விலை 8 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து உள்நாட்டு அரியின் விலை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் கேமக பண்டார தெரிவித்துள்ளார். அரிசி மீதான இறக்குமதி வரியை 65 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் கடந்த 6 ஆம் நாள் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனடிப்படையில், அரிசி...
அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது. கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன்...
இனங்களுக்கிடையிலான இந்த நல்லிணக்கமானது கட்டாயமாக நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஆனால் நாம் நல்லிணக்கம் என்று சொல்கின்றோம், பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். ஆனால் யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் “நல்லிணக்கம்” என்றால் என்ன என்று தெரியாத அளவில் மக்கள் வாழ்கின்றார்கள் என தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க வாரத்தினை முன்னிட்டு, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க பிரகடனத்தினை முன்வைக்கும் நிகழ்வில்...
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இதுவரை செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பட்டலந்த பயிற்சி முகாமின் புதிய கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்....
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று காலை வழங்கப்படவுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவான நியமனத்திற்கு இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தற்பொழுது நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரச ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
வேகமாகச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று இளைஞர் ஒருவர் மீதும், பொலிஸ் வாகனம் தாதி ஒருவர் மீதும் மோதிய சம்பவம் வவுனியாவில் இருவேறு பகுதிகளில் பதிவாகியுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று (12) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில்...
உத்தேச அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒத்த வகையில், அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அதேவேளை, அதில் காணப்படுகின்ற பொதுப்பட்டியல் நீக்கப்படுவதுடன் வடக்கு – கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.. தற்போது, சமஷ்டியா – ஒற்றையாட்சியா...
இலங்கையில் இன்று வெள்ளிக்கிரத்தைத் தெளிவாகப் பார்க்கமுடியுமென ஆதர்சி கிளார்க் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று மாலை 6.30ல் இருந்து இரவு 9 மணி வரையில் இதனை பார்க்க முடியும் எனவும் இந்த நேரப்பகுதியில் மேற்கு வானில் வெள்ளிக் கிரகம் தெளிவாக தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளிக் கிரகத்தைப் பார்ப்பதற்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் பலமுறைகளில்...
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முன்னிலையில் 21பேர் சாட்சியமளித்துள்ளனர். ஊழல், மோசடி தொடர்பாக வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் விசாரணை நடாத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர்களைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள்...
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!! 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி...
பரந்தன் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் இன்மையால், தருமபுரம் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஏ-9 வீதியில் பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி வாவியடி பகுதியில் இருந்து, பரந்தன் பகுதி வரையான 23 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரே எரிபொருள் நிரப்பு நிலையமாகும். தருமபுரம் விவசாயிகள்,...
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உற்கொண்ட உணவு நஞ்சானதால், 12 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள் உட்பட 15 பேர் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சி.சுதோகுமார் தெரிவித்தார். உப்புகிணற்றடி கரணவாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சமைக்கப்பட்ட உணவே இவ்வாறு விசமாகியுள்ளது....
இந்தியாவில் இருந்து கேரள கஞ்சாவினை கடத்தி வந்த இரண்டு இந்தியர்களை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த நிறையானது 50 கிலோ என்றும், அதன் பெறுமதி 87 இலட்சத்து 50 ஆயிரம்...
வலி. வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் அன்று (14.01) இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். வலி.வடக்குப் பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் இருக்கின்ற காரணத்தினால், கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும்,...
மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைத்தால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டை யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்ற சரியானதை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவரது...
வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டமோன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, தமிழ் தேசிய...
Loading posts...
All posts loaded
No more posts
