- Monday
- May 11th, 2026
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவின் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலும் தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திரல் ஈடுபட்டு வருகின்றனர்.
வல்வெட்டிதுறை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட 5 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 தொடக்கம் 27 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி மதுபானம் வாங்கும்...
தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராக இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகளின் கட்சி செயலாளர் இரா. கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலைய மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த கால...
வட மாகாண சபையில் 81 கூட்டத் தொடர்களில் 321 பிரேரணைகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு சி.வி. விக்னேஷ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட வட மாகாண சபையில் இடம்பெற்ற கூட்டத்தொடர்களிலேயே இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் அதிகமான தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரானவை எனவும் கூறப்படுகின்றது. இந்த பிரேரணைகளில் அதிகமானவை...
பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
முல்லைத்தீவு கேப்பாபுலவு கரைதுரைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலக்குடியிருப்பு கிராமத்தில் 64 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் காணப்படுவதாகவும் அவற்றில் தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு சொந்த நிலங்களிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி மாதிரிக் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டனர்....
மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்பட அழைப்பதுதான் உகந்தது. அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்படவேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றய தினம் நெடுந்தாரகை படகுச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
புனர்வாழ்வளிக்கப்பட்ட 61 பயனாளிகளுக்கு சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்றய தினம்(20) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா. செந்தில்நந்தனன் தலைமையில் இடம்பெற்றது. கடற்றொழில், மாடு வளர்ப்பு, கணனி , மின்னியல், தையல், தச்சு வேலை போன்ற துறைகளில் சுயதொழில் புரியவுள்ள காரைநகர் பிரதேச செயலக பிரிவினைச்சேர்ந்த 17 பேர்...
கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி...
நெடுந்தாரகை கப்பலின்முதல்ப் பயணம் குறிக்கட்டுவான் – நெடுந்தீவு 20.01.2016 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணியளவில் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………………………………… கௌரவ ஆளுநர் அவர்களே, அமைச்சர் கௌரவ பை(க)சர் முஸ்தபா அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய Bryce Hutchesson அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான முதன்மைச் செயலாளர் அவர்களே, உலக வங்கியின்...
இறக்குமதி செய்யப்படும் அரிசியை எக்காரணங் கொண்டும் 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விரும்பிபடி அரிசி விலையை அதிகரித்து பொதுமக்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க...
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சைய்த் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களின் நிலையானதாக முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் எதிர்பார்ப்பாகும் என்று அவர்...
வவுனியா - பாரதிபுரம் ஐம்பது வீட்டுத்திட்டம் பகுதியில் விளையாட்டு விபரீதமாகியதில் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நேற்று மாலை மரத்தில் கயிற்றினைப் போட்டு அதை கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் கயிறு கழுத்தில் இறுகியுள்ளது. உடனடியாக இரு சகோதரர்களும் அயலவர்களின் உதவியுடன்...
யாழ். மாவட்ட பனை அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கி வந்த திக்கம் வடிசாலை வடக்கு மாகாண சபையின் ஆளுகையின் கீழ் கொண்டு வர இணக்கம் காணப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு தொடக்கம் திக்கம் வடிசாலையில் பணியாற்றிய ஊழியர்கள் 23 பேருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என இன்றைய தினம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பனை அபிவிருத்தி...
தமிழ் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை, அவர்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வினை ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ள எதிக்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தீர்வு விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவினை எடுக்கமுடியாது என்றும் இதனை தமிழ் மக்கள் மிகவும் கவனமாக சிந்திக்கவேண்டும் எனவும்...
வங்காள விரிகுடாவிலேயே பிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதரமர், இந்தியாவின் என்.டி.டீ.வி. இற்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது திருகோணமலையின் திட்டமிடல் நடவடிக்கைகள் சிங்கப்பூரினால் மேற்கொள்ளப்படுவதாகவும், அது...
கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை நாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர்...
மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை வெளிகாட்டும் ஒரு சில நடவடிக்கைகளை மாத்திரமே வடமாகாணத்தில் மேற்கொண்டிருக்கின்றது. அதனைவிட ஏனைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வெள்ளோட்டம்...
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கிளிநொச்சியில் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந் பெருமளவான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழக மக்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
