- Monday
- May 11th, 2026
கிளிநொச்சி மாவட்டம் திருவையாறுப் பிரதேசத்தில் மீண்டுமொரு முன்னாள் போராளி கைதாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கராளசிங்கம் குலேந்திரன் என்பரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த குறித்த முன்னாள் போராளி கடந்த வாரம் வெளியில் சென்றிருந்தபோது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புனர்வாழ்வு...
சகோதரியின் வங்கி கணக்கில் இருந்து போலியான கையெழுத்து மற்றும் அடையாள அட்டையினை காண்பித்து 45ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட பெண்ணைத் தேடி தெல்லிப்பழை பொலிஸார் வலை விரித்துள்ளனர். மணற்குளம் அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த பெண்ணுக்கு சமூர்த்தி வங்கியில் இருந்து கிடைத்த பணத்தை, அளவெட்டி பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் வைப்பிட்டுள்ளார். இதனையடுத்து, கடந்த...
வடமராட்சி கிழக்கு பகுதியில் போலி நாணயத்தாளை அச்சடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை,பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி கந்தசாமி, சனிக்கிழமை (21) மாலை உத்தரவிட்டார். வல்வெட்டித்துறை விடுதி ஒன்றில் வௌ்ளிக்கிழமை போலி நாணயத்தாளை வழங்க முற்பட்ட நபர் பொலிஸாரால் கைது...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடபுல முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டே வடமாகாண சபையின் அரசியலை அரங்கேற்றுவதாக, சிலர் முன்வைத்து வருகின்ற விமர்சனங்களை மறுப்பதாக, வடமாகாண சபை உறுப்பினர் முகமது றயீஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'வடக்கு முதல்வர், ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் எதிராளி அல்ல. முஸ்லிம்கள் தொடர்பாக முதலமைச்சர்...
இலங்கையை சுற்றி, 1268 கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே கடப்பதற்கான முயற்சியில், தேவிகா காசிஷெட்டி என்ற பெண் இறங்கியுள்ளார். தனது நடைபயணத்தைக் கடந்த 10ஆம் திகதியன்று கதிர்காமம் கிரிவேஹர விகாரைக்கு அண்மையில் ஆரம்பித்த இவர், காலி மாவட்டத்தில் உள்ள அஹங்கம நகரத்தை நேற்றுக் கடந்தார். தனது பயணத்தை எதிர்வரும் மே மாதத்தன்று, கதிர்காமம் கிரிவேஹர விகாரையிலேயே...
விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துககொள்ளப்படவுள்ளனர். இதற்கான அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது. அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பணிப்புரைக்கமைய, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்திசெய்யப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்தார். போட்டிப்...
கிளிநொச்சி - உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு...
முல்லை – பரந்தன் வீதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மண் ஏற்றி வரும் மண் டிப்பர்களை உரியவர்கள் தடுத்து நிறுத்துவார்களா என்று மக்கள் கேட்கின்றனர். அண்மையில் யாழ் பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தின் இதழியல் டிப்ளோமாதாரியான மாணவர் ஒருவர் மண் டிப்பர் மோதி பலியானார். புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24)...
மாங்குளம் பிரதான வீதியில் விசேட அதிரடிப்படையினரின் வாகனமொன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சமய போதகர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் ஒட்டுச்சுட்டான் 17ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 60 வயது நிறைந்த போதகர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். குறித்த போதகர் கிளிநொச்சி மாவட்ட...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், நேற்று முதல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையானது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. வறட்சியால் நிலம் காய்ந்து பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் விளைச்சலை இழந்ததோடு பல பிரதேசங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையானது...
கிளிநொச்சி – உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்கள் 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது....
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராடப்போவதாக அறிவித்துள்ள அச்சங்கத்தினர் அது தொடர்பான கடிதத்தினை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த உணவுத்...
பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி அச்சம் எழுந்துள்ளது. புவியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவின்...
வடமாகாண விவசாய அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (22.01.2017) கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்ச்சியில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த, 'பூமியை மீளுயிர்ப்பூட்டும்...
சாவகச்சேரி கச்சாய் பகுதியில் படி ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (19) காலை இடம்பெற்ற விபத்தில் உதயகுமார் வினோத்குமார் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரழந்துள்ளார். சாவகச்சேரி பகுதிக்கு சென்று விட்டு கச்சாயிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போதே குறித்த...
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககோரி இன்றைய தினம் காலை யாழ். இந்திய துணை தூதரகத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதுடன் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படுகின்றது.
தேசிய தமிழர் பண்பாட்டு பேரவையின் ஒழுங்கமைப்பில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்.பொது நூலக முன்றலில் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையுடன்...
இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் விரும்பக்கூடியதும் பாரபட்சம் அற்றதும் சமய அங்கீகாரத்துடன் கூடிய மதச் சார்பின்மையில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் அதுவே நாட்டில் சிறந்த சுழலை ஏற்படுத்தும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் உள்ள சமய புறக்கணிப்பு எதிர்காலத்தில்...
வட மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வரட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள கிராமங்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் வரட்சியானல் பெருமளவு விவசாயம் அழிவடைந்துள்ளதுடன், பல கிராமங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த...
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் செயற்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களின் விடுதி வசதிகள் நீக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைப்கு எதிர்ப்புத் தெரிவித்து...
வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமான வரி...
Loading posts...
All posts loaded
No more posts
