- Monday
- May 11th, 2026
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் காணாமல் போகச் செய்யப்பட்ட தமது உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களை சேர்ந்தோர் வவுனியா ஏ 9 வீதியில் பிராதான தபாலகத்திற்கு முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் காலவறையற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வவுனியாவிலுள்ள முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை...
தலதா மாளிகைக்கு முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பிக்குணியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதையடுத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதிய அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நல்லாட்சி அரசாங்கம் நாட்டைப் பிரிக்கமுயல்வதாகக் கூறி குறித்த பிக்குணி சாகும் வiரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். எனினும், இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்தவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும்...
நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள வீடுகளுக்கான 250 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து, இம்மாதம் 30 ஆம் திகதி வீடமைப்பு அமைச்சரினால் வீடுகளுக்கான அத்திவாரம் இடும் நிகழ்வு இடம்பெறவுள்ளதென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வருடங்களாக குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின்...
கிழக்கு பல்கலைகழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி, பல்கலைக்கழத்தின் பிரதான வயிலுக்கு முன்னால் நேற்றையதினம் (23) ஒன்றுகூடிய மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் விடுதி உரிமைப் போராட்டம் காரணமாகப் பல்கலைகழகத்தில் விரிவுரைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளனன. முன்னதாக கடந்த சனிக்கிழமை, மாணவர்கள் அனைவரையும் பல்கலைகழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது....
தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்புக்கு, அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாப் பொதிகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்து காரை மறித்து...
போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் புளக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர். களுத்துறை வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலரினால் அச்சிடப்பட்ட போலி ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத்தாள்கள் தரகர்கள் மூலம் புளக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது குறித்து மிக விழிப்புடன் செயற்படுமாறு,...
2016-2017 பல்கலைக்கழக கல்வி ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத ஜிசிஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேமகுமார தெரிவிக்கையில்:...
திருகோணமலைத் துறைமுகத்தின் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிஸர்லாந்து விஜயத்தின் போது, இந்திய...
வெளி மாவட்டங்களில் பணியாற்றும் தங்களுக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய வடக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் பணித்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையானது ஜனநாயகத்தை நசுக்கும் செயற்பாடாகுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமக்கான இடமாற்றத்ததை வலியுறுத்தியும் சில ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணித்தடையை விலக்குமாறு கோரியும் வடக்கு...
கடத்தப்பட்டு காணாமல் போன மற்றும் ராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போன உறவுகள் தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலையில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) நண்பகல் முதல்...
வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை எதிர்கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தன்னிடம் கோரவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விஜயத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் இணங்கி செயற்படுமாறே இரா. சம்பந்தன் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த மாத முற்பகுதியில் கனடாவிற்கு விஜயம் செய்திருந்தார். இந்த...
நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சிக்குப் பலரும் இயற்கையையே குற்றம் சாட்டிவருகிறார்கள். இயற்கை வஞ்சித்துவிட்டது என்றும் இயற்கையின் கொடூரம் என்றும் குறிப்பிட்டு வருகின்றார்கள். உண்மையில் வறட்சி இயற்கையின் கொடூரம் அல்ல இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவுதான் வறட்சி என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு விவசாய அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்குரிய சாதனை விவசாயிகளைக் கௌரவிக்கும்...
மாத்தறை ஊறுபொக்க பிரதேசத்தில் வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு போன்ற ஒரு பொருள் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊறுபொக்க ,கொலன்ன ,ஹேயஸ், தாபன்ன போன்ற பிரதேசத்தில் வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டு போன்ற ஒன்று தென்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருள் தென்பட்டுள்ளதாகவும், இதனால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இது வேற்று கிரக வாசிகளின்...
தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடன் ரத்துச் செய்ய வேண்டும் என்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி ஒருவர் அவரை சந்திப்பதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் நடைமுறையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த...
ஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன்னெழுச்சி போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் ஜல்லிக்கட்டு மிருகவதை. எனவே...
யாழ்ப்பாணம், எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் (ஆர்.ஓ பிளாண்ட்) திட்டம், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐய குணரட்னவினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. எழுவை தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில் கடற்படையினர் பணியாற்றிய போது கிடைத்த சம்பளத்திலேயே இந்த நன்னீராக்கும் திட்டம் எழுவைதீவு,...
கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்துமாறு கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வந்தாறுமூலை ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'விடுதி மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்து, சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதிகளைப் பெற்றுக் கொடு' என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் அந்த சுவரொட்டிகளில் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்...
கொக்குவில் பகுதியில் இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் நேற்று மாலை கொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் சிலர் மது அருந்திய நிலையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட கருத்து மோதலானது கைகலப்பாக மாறிய நிலையில் இளைஞர்களுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு அது...
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். வவுனியாவிலுள்ள முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பேரணியாக சென்று வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட...
இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக் கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு தமிழர் திருநாளாக தைப்பொங்கல் இருந்து வருகின்றது என வடமகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில்...
Loading posts...
All posts loaded
No more posts
