ஐநாவில் தமிழர் விவகாரத்தை பிற்போடுவதற்கு அரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணைந்து செயற்படுகின்றது!

ஐநாவில் சிறீலங்கா தொடர்பான விவாதத்தை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிற்போடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் சிறீலங்கா அரசாங்கம் ஐநாவைக் கோரியுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் சமஸ்டி ஆட்சி எமக்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லையெனவும், ஒற்றையாட்சியின் கீழே தீர்வு கிடைக்கும் என்பதும் நன்றாகவே புலப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்....

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிய ஊடகத்துறை மாணவன் பலி!

கிளிநொச்சியில் நேற்று மாலை ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கெதிரான போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வீடுதிரும்பிய ஊடகத்துறை மாணவன் ஒருவன் விபத்தில் பலியானார். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதுமாக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழகத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு உந்துருளியில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த சுப்ரமணியம் முரளீதரன் என்ற ஊடகத்துறை...
Ad Widget

கருக்கலைப்புக்கு அங்கிகாரம்?

நெருங்கிய உறவினரிடையேயான பாலுறவு, பலவந்தப் பாலுறவு, சிறுவயதுக் கர்ப்பம், கருவில் கடுமையான குறைபாடு ஆகிய நிலைமைகளில் கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்க, அமைச்சரவையில் அங்கிகாரம் கோரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் தொடர்பான குழுவும் சாவித்திரி குணசேகர தலைமையிலான இன்னொரு குழுவும், கருக்கலைப்பை குற்றவியல் குற்றமாக்கும்படி செய்த பரிந்துரைகளுக்கு அமைய, நீதியமைச்சு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்தக் குழு, 1995ஆம் ஆண்டில் ஒரு...

வடக்கில் அபிவிருத்தி பணிகள் அரம்பம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பொது மக்களிடம் நேற்று கையளித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைவாக நிலைபேறான மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்பேம் என்ற தொனிப்பொருளிலான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு...

நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று ஆரம்பம்

குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகிறது. இதுதொடர்பான நிகழ்வில் இலங்கைக்கான அவூஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்திளால் இந்த நெடுந்தாரகை பயணிகள் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 150...

மழைவேண்டி மலையகத்தில் ஆலயங்களில் நீராபிஷேகம்! இன்று முதல் மழை என்கின்றது வானிலை நிலையம்

வறட்சிக் காலநிலை நீங்கி மழைவேண்டி மலையகத்தில் உள்ள ஆலயங்களில் தண்ணீர் ஊற்றி பூஜைவழிபாடுகளில் பொதுமக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். லிந்துலை டில்குற்றி தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று ஆலயத்தில் சுற்று வட்டாரங்களுக்கும் சுவாமி விக்ரங்களுக்கும் நீராபிஷேகம் செய்யப்பட்டது. இதில் இத்தோட்ட மக்கள் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதேவேளை நாட்டில் காலநிலையில் இன்று முதல் மாற்றம் நிலவவுள்ளதாக...

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பலி

கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் அமைந்துள்ள இளைஞனின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது, எதிர் திசையில் மணல் ஏற்றி வந்த லொறி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பணித்த இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....

உண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன்

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன் என சில இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது விடின் அனந்தி சசிதரன் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் , எதிர்வரும் 21ம் திகதி அவர் தனது போராட்டத்தை...

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு: மேன்முறையீட்டு மனு தள்ளுபடி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்ங்கள்?

கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவர்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பெருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறன. அந்த வகையில் கிளிநொச்சி...

பருத்தித்துறையில் மோட்டார் குண்டுகள் மீட்பு

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பன் பகுதியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் இரண்டு இன்று (19) மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். அம்பன் கிழக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அங்கு சென்ற பொலிஸார் குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர்....

சர்ச்சைக்குரிய பொருத்து வீட்டுத் திட்டம்: ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தர்க்கம்

வடக்கில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதுகுறித்து வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதற்காகவா வடக்கு மக்களுக்கு பொருத்து வீட்டுத் திட்டத்தினை திணிக்கின்றீர்கள் என இதன்போது ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் ராஜாங்க...

யாழில் ஒப்பந்தக்காரர்களை நியமிப்பது சவாலாக உள்ளது!

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தக்காரர்களை நியமிப்பது, பெரும் சவாலாக உள்ளதென யாழ். அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த வேலைத்திட்டங்களில் குறிப்பாக வறட்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய திட்டங்களை...

இனி வாகன ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்த முடியாது

வாகனங்களின் முன் வாயில் ஜன்னல்களில் உள்ளிருப்பவர்களை மறைக்கும் வகையிலான திரைச்சீலைகள் (curtains) அல்லது கறுப்பு நிற ஸ்டிக்கர்கள் (tints) போன்ற திரைகளை இடும் நபர்களுக்கு எதிரான சட்டம் இன்றும் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

மல்லாகத்தில் ரயிலுக்கு கல்வீச்சு!! ஓட்டுநர் வைத்தியசாலையில்

மல்லாகம் உப ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்த நபர் குறித்த ரயிலின் ஓட்டுநர் எனத் தெரியவந்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மீதே இவ்வாறு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்...

கிளிநொச்சியில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. யாழ். நல்லூரில் நேற்றுமாலை ஆயிரக்கணக்கான...

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து விரைவில் முடிவு

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. டெல்லி சென்றிருக்கும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, அங்கு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். திருகோணமலை துறைமுகம் விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். “ஆழ்கடல் துறைமுகங்களில் திருணோகமலை துறைமுகம் முக்கியமான ஒன்று. அதை இந்தியாவுக்கு...

உறுப்பு தானம் செய்வதற்கான விருப்பம் சாரதி அனுமதி அட்டையில்

விபத்துக்களின் போது தங்களின் உறுப்புக்களை தானம் செய்வதற்கு அனுமதி வழங்கும் சாரதிகளின் விருப்பத்தை, சாரதி அனுமதி அட்டையில் பதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்துள்ளார். இதன்படி, விபத்துக்களின் போது உயிரிழக்கும் சாரதிகளின் உறுப்புக்களை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான...

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி யாழ். நல்லூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று மாலை 4.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள்...

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அனந்தி சசிதரன் அறிவிப்பு!

இறுதி யுத்தத்தில் காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் சரியான தகவலை வழங்காவிட்டால் தான் சாகும்வரையான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது கணவர் உட்பட பலரின்...
Loading posts...

All posts loaded

No more posts