புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட வரைபு தொடர்பில் கூட்டமைப்பு இரட்டை வேடம்

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த சட்ட வரைபின் உள்ளடக்கம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். சுமந்திரனுடைய கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோ அவர்கள் இவ்விடயத்தில் கூட்டமைப்பினர்...

தமிழீழ இலட்சினைகளுடன் புடைவை விற்பனைக்கு!

தமிழீழ தேசிய இலட்சினைகளுடனான புடைவைகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் குறித்த புடைவை வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசிய மலரான கார்த்திகை பூவும், இலங்கை வரைபடத்தின் தமிழீழ இராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Widget

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு உண்மைகளை மறைத்து பொய்யாக செய்திகளை கூறிவருகின்றது

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு உண்மைகளை மறைத்து பொய்யாக செய்திகளை கூறிவருகின்றது உண்மையாகவே நாம் எதிர்பார்க்கக்கூடிய எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என அமைச்சர் மனோகணேசன் பிரித்தானியாவில் தெரிவித்துள்ளார். நான் இவ்வாறு உண்மைகளை சொல்லுவது சம்பந்தன் சுமந்திரனுக்கு பிடிப்பதில்லை சந்திரனை தருகிறோம்,இந்திரனை பிடித்து தருகிறோம் என த.தே.கூட்டமைப்பு பம்மாத்து காட்டிவருகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள மனோ கணேசன் உண்மையாக...

வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை பரப்புவோர் தொடர்பில் எச்சரிக்கை

வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக தற்போது சமூகவலைத்தளங்களில் செய்தியொன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களம் மற்றும்...

வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நினைவேந்தல்!

முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நாள், எதிர்வரும் 18ஆம் திகதி வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கான ஒழுங்குகள் நடைபெற்றுவரும் அதேவேளை, இது குறித்து எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் பின்னர் விரிவாக கலந்துரையாடப்படுமெனவும்...

மாணவன் ஒருவனிடம் இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் பதற்றம்!

கிண்ணியா அல் அதான் வித்தியாலய மாணவன் ஒருவனிடம் நேற்று வெள்ளிக்கிழமை (05) இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் கிண்ணியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிண்ணியா மகரூப் நகரை சேர்ந்த சதாத் முகம்மது ருஸ்தி (வயது 11) என்ற இந்த மாணவன் அல் அதான் வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கிறான். இம்மாணவன் பாடசாலை முடிந்து வரும்போது வெள்ளைக்...

அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரசாங்கம் சரியான தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களும் கடுமையான நடவடிக்கைகயை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக சங்கத்தின் மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார். இதேவேளை நேற்று வைத்தியர்கள்...

இரணைமாதா நகர் போராட்டத்தில் 5வது நாளாக த,தே.ம.முன்னணி பங்கேற்பு

இரணைதீவு மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என கோரி இரணைமாதா நகரில் கடற்கரை ஓரமாக தகரக் கொட்டகைக்குள்ளிருந்து போராட்டம் நடாத்திவருகின்றனர். வீதியோரம் சமைத்து உண்டவாறு இரவுபகலாக தங்கியிருந்து போராடுகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆரம்பித்த நாள் முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 5வது...

சார்க் செய்மதி ஏவப்பட்டமை தொடர்பில் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை உள்ளிட்ட சார்க் உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் பொதுவான தொடர்பாடலுக்கான செய்மதி நேற்று(05) பிற்பகல் இந்தியாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். நேற்ற (05) பிற்பகல் அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தினூடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் தொடர்பு...

இந்திய ஆசிரியர்களை வரவழைக்கும் நடவடிக்கை ; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஊவா மாகாணத்தில் நிலவும் க.பொ.த உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இந்திய ஆசிரியர்களை வரவழைக்கும் நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதேவேளை, ஊவா மாகாணத்தில் உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். ஊவா மாகாணத்தில் நிலவும்...

நான் ஆட்சி செய்திருந்தால் வேலைநிறுத்தம் இடம்பெற்றிருக்காது

தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் வேலைநிறுத்தம் இடம்பெற்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை, மாகந்துர, ரன்சேகொட விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி தீா்வை வழங்கும் என்ற நம்பிகையை தமிழ் மக்கள் இழக்கின்றனா்: எஸ். ஸ்ரீதரன்

நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு பிளவுபடாத நாட்டில் சுயநிர்ணயத்துடனான சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில், நடைபெற்ற இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை...

அரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து!: சம்பந்தன்

அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில் மந்த கதியில் செயற்பட்டு வந்த அரசாங்கம், தற்போது அவ்விடயத்தில் பின்வாங்கும் ஆபத்து காணப்படுகிறது என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி...

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் மாகாணசபைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 68 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 8 மணியளவில் வடக்கு மாகாண சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த போவதாகவும்...

வடக்கு மாகாணசபைக்குட்பட்ட 6 வைத்தியசாலைகளை தரமுயர்த்த மத்திய அரசு ஒப்புதல்!

வடமாகாண சுகா­தா­ரத் திணைக்­களத்­திற்கு கீழ் உள்ள 6 வைத்­தி­­யசாலை­க­ளைத் தரம் உயர்த்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சு ஒப்­பு­தல் அழித்துள்ளதாக மாகாண சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் கீழ் இயங்­கும் 110 வைத்­தி­ய­சா­லை­க­ளில் 6 வைத்­தி­ய­சா­லை­க­ளைத் தரம் உயர்த்­து­வ­தற்காக மாகாண சபை­யில் தீர்­மா­னம் கொண்டுவரப்பட்டு கொழும்பு சுகா­தார...

புத்தள விபத்தில் முல்லை. மாவட்ட செயலக சாரதி பலி

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராம்பியடி பிரதேசத்தில் நேற்ற(05) அதிகாலை 3 மணியளவில் இடம்பெறற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கீழ் இயங்கும் தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்கள சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் என்பவரே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து கொழும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்டச்...

வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டமையால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்

இரணைத் தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால், அந்த வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதனாலேயே போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஜந்தாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து...

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இரு இளைஞர்கள் உட்பட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சுழிபுரம் பனிப்புலம், பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் யஸ்ரின் (வயது 17) மற்றும்...

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த தந்தைக்கு விளக்கமறியல்

தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து அதனை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்த நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிபதி ரி.கருணாகரன் நேற்று வியாழக்கிழமை உத்தரவு இட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது , திருட்டு குற்றம் ஒன்று தொடர்பில் சுன்னாகம் பொலிசாரினால் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும்...

மாணவியிடம் காதலை தெரிவித்தார் ஆசிரியர்!: பாடசாலை கல்வி செயற்பாடுகள் பாதிப்பு!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவியிடம் தனது காதலை தெரிவித்ததால், பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட சம்பவம், இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், அனலைதீவில் உள்ள பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரண தர மாணவியிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த, மாணவி இந்த விவகாரம் தொடர்பில் தன்னுடைய உறவினர்களிடம்...
Loading posts...

All posts loaded

No more posts