அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில் மந்த கதியில் செயற்பட்டு வந்த அரசாங்கம், தற்போது அவ்விடயத்தில் பின்வாங்கும் ஆபத்து காணப்படுகிறது என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் அதிகளவான பெரும்பான்மையினர் கலந்துக் கொண்டிருந்தனர்.
அக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, நாட்டிற்கு ஆபத்தான அரசியலமைப்பிற்கு ஒருபோதும் ஆதரவளிக்க போவதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதியின் பேரணி குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளிலிருந்து பின்வாங்கும் நிலை ஏற்படும் என்றார்.