புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விரைந்து முடிக்கப்படும்!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படின் குறித்த வழக்கை தொடர் விசாரணைகள் மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று (05) தெரிவித்தார். இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம், எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில்...

வேலை நிறுத்தம் வெற்றி என்கிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

இன்று காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. சுகாதார தொழிற் சங்கங்கள், போக்குவரத்து, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளதுடன், மாணவர் சங்கங்களின் ஆதரவும் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 24 மணித்தியால...
Ad Widget

பணிப்புறக்கணிப்பால் வடக்கு மக்கள் அசௌகரியம்

மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிதொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மக்கள் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வைத்தியர்கள் காலவரையறையின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதி சிகிச்சைப் பிரிவில் மட்டும் வைத்தியர்கள் தமது சேவையில்...

தமிழ் பொலிஸ் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வதில் சிரமம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வது சிரமமாக காணப்படுகிறது என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு செல்கின்ற பொதுமக்கள்...

முதலாம் ஆண்டு ஆசிரியை நடத்தும் அறுநூறு மாணவர்களை கொண்ட 1சி பாடசாலை

கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இன்மையால் அறுநூறு மாணவர்களை கொண்ட பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறு அதிபர்கள் காணப்படுகின்றனர் என பெற்றோரும் கல்விச் சமூகமும்...

30 தொழிற்சங்கங்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்

சுகாதாரம்,கல்வி மற்றும் போக்குவரத்து துறைகளைச்சார்ந்த சுமார் 30 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இன்று (05) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஆபத்தான நிலையிலுள்ள நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டாதெனவும், மகப்பேற்று மற்றும் சிறுவர்...

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்பட மாட்டாது. இதனை முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. இன்று நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தேங்காய் உடைத்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று 71வது நாளை எட்டியுள்ள நிலையில் நேற்றயதினம் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர். நேற்று மதியம் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் தேங்காய் உடைத்து தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்த உண்மைத் தகவல்கள்...

புதிய சீர்திருத்தம் மக்களின் சுதந்திரத்தினைப் பாதிக்கும்: சுமந்திரன்

அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக நடைமுறைப்படுத்தவுள்ள சட்ட சீர்திருத்தமானது மிகவும் அபாயகரமானது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத திருத்த யோசனைகள் அரசாங்கத்தினால் மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும். இது...

ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள்!

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் 1,000 பேருக்கு முதற்கட்டமாக கால மூப்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என அம்மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், தெரிவித்தார். மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் இந்த வாரம் சந்தித்துக்...

பணிக்கு வராதவர்கள் விலகியதாக கருதப்படுவர்

சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்தக் கோரி மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் புகையிரத ஓட்டுனர் சங்கமும் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளது. எனினும், இன்று பணிக்கு சமூகமளிக்காத லோகோமோட்டிவ் பொறியியலாளர் சங்கத்தின் சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

2017 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று தொடக்கம் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 31ம் திகதியுடன் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நிறைவடையும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுத் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு இந்திய எக்சிம் வங்கி நிதியுதவி

காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி (Exim Bank) வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை பெற்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர்...

மைத்திரி மஹிந்த இரகசிய சந்திப்பு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றிரவு இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு கறுவாத் தோட்டத்தில் உள்ள விடுதி ஒன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சந்திம வீரகொடி, லசந்த அழகியவன்ன மற்றும் டிலான் பெரேரா ஆகியோர்...

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை: பிரதமர்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையிலான பாலமொன்றை அமைப்பது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைய இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மைய இந்திய விஜயத்தின்...

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள்! டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்!

யாழ் குடாநாட்டில் மணல் அகழ்வு தொடர்பில் உரிய பொறிமுறை ஒன்றை வகுத்து, பயனாளிகள் நியாய விலையிலும், இலகுவாகவும், தரமானதாகவும் அதனைப் பெறக்கூடிய ஒரு நிலைப்பாட்டினை புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தின் நேரடிக் கண்காணிப்பாளர்களின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றமுன்தினம் நாடாளுமன்றத்தின் ஊடாக சூழல் அமைச்சர் என்ற வகையில்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் பத்து பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...

சுன்னாகம் பொலிஸ் நிலைய சித்திரவதை வழக்கு ; பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை

சுன்னாக பொலிஸாரினால் சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்தமை தொடர்பான வழக்கில் அப்போதைய சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார உள்ளிட்ட 6 பொலிஸாரை குற்றவாளியாக கண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீரப்பளித்துள்ளார். அதேவேளை குறித்த வழக்கின் 3 ஆவது...

வெடிபொருள் சந்தேகத்தின் பேரில் குளப்பகுதி அகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் – நடனமிட்டான் குளப்பகுதி மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், குளப்பகுதி அகழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) இவ் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த பகுதியிருந்து வெடிபொருட்கள் எவையும் மீட்கப்படாததால், அகழ்வுப் பணி கைவிடப்பட்டது. அகழ்வு...

அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்: சிவாஜிலிங்கம்

வடக்கு கிழக்கிற்கு வரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவர் என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வலி. வடக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த...
Loading posts...

All posts loaded

No more posts