Ad Widget

அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்: சிவாஜிலிங்கம்

வடக்கு கிழக்கிற்கு வரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவர் என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வலி. வடக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதி வழங்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதத்துடன் ஓராண்டுகள் பூர்த்தியாகின்றன.

ஆனால் இதுவரை காணி விடுவிப்பில் முழுமையான முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. அதுமாத்திரமின்றி அரசியல் தீர்வு குறித்த அரசியலமைப்பிலும் முன்னேற்றம் இல்லை.

இவ்வாறாக தீர்வின்றி தொடர்ந்துவரும் தமிழர் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் தீர்வு காணப்படாவிடின், தமிழ் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவர்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு நல்லிணக்கம் மீது உண்மையான கரிசனை காணப்படின் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றார்.

Related Posts