Ad Widget

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தேங்காய் உடைத்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று 71வது நாளை எட்டியுள்ள நிலையில் நேற்றயதினம் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

நேற்று மதியம் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் தேங்காய் உடைத்து தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்த உண்மைத் தகவல்கள் விரைவில் வெளிவர வேண்டும் எனவும் உருக்கமாக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அவசரகாலச் சட்டத்தினை இரத்துச் செய்யுமாறும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விபரங்கள் விரைவில் அரசாங்கத்தினால் வெளியிட வேண்டுமெனவும் கோரி கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதுடன் கண்டன ஊர்வலங்களையும் முன்னெடுத்து வருகின்றமை யும் குறிப்பிடத்தக்கது.

Related Posts