Ad Widget

வெடிபொருள் சந்தேகத்தின் பேரில் குளப்பகுதி அகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் – நடனமிட்டான் குளப்பகுதி மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், குளப்பகுதி அகழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) இவ் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

எனினும் குறித்த பகுதியிருந்து வெடிபொருட்கள் எவையும் மீட்கப்படாததால், அகழ்வுப் பணி கைவிடப்பட்டது.

அகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன், முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலர், தொல்பொருள் திணைக்களத்தினர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

Related Posts